ராகுபகவான் இங்கு இருந்தால்... புதுவிதமான அனுபவம் ஏற்படும்...!! - Seithipunal
Seithipunal


ராகுபகவான், நவகிரக பீடத்தில், சூரியனுக்கு வடமேற்காக இருப்பார். உயரமான வடிவம் கொண்டு, முறம் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பார். அவர் தலை மனித வடிவிலும், உடல் கரும்பாம்பின் வடிவிலும் இருக்கும். 

வாகனம், ஆட்டுக்கிடா, எட்டுக் குதிரைகள் பூட்டிய தேரிலும் இருப்பார். சிம்ஹி, சித்ரலேகை என இரு மனைவியருடன் இருப்பார். சுவர்பானு என்பவனின் இரு பகுதிகளில் ஒரு பகுதி ராகுவாக மாறியது. 

ராகுபகவானிற்குரிய நட்பு ராசிகள் மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகும். சமமான ராசி இல்லை. பகை ராசிகள் மேஷம் மற்றும் கடகம் ஆகும். 

வலிமையான ராகுபகவானை தனது ஜாதகத்தில் பெற்றவர்கள் எதிரியை வெல்லும் ஆற்றல் பெற்றவர்களாக திகழ்வார். அதிலும் குறிப்பாக ஆறாம் இடத்தில் பலம்பெற்று திகழ சிங்கத்தை கண்ட மான்போல பயந்து ஓடுவார்கள்.

லக்னத்திற்கு 12-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு வளமான வாழ்க்கை கிடைக்கும்.

பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது.

27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.

12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.

கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். 

அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள்.

தேவையற்ற பழக்க வழக்கங்களை உடையவர்கள்.

புதியதை விரும்பி தேடி செல்லும் குணம் கொண்டவர்கள்.

ஏற்றத்தாழ்வான பொருளாதாரம் உடையவர்கள்.

நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

மனம் மற்றும் உடல் வலிமை இல்லாதவர்கள்.

செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

பிறர் அறியாத வண்ணம் பயனற்ற செயல்களை செய்யக்கூடியவர்கள்.

வாழ்க்கையில் முன்னேற்றம் காணக்கூடியவர்கள்.

எதிலும் மனநிறைவு என்பது இல்லாதவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragu bagavan on 12th place


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->