பெரம்பலூர் | பாலையூர் சக்தி மாரியம்மன் கோவில் மாவிளக்கு பூஜை.!
palaiyur sakthi mariyamman mavilakku pooja
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் அனைவரும் மாரியம்மனுக்கு மாலையணிந்து, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதன் பின்னர், பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இதனை அடுத்து, பாலையூர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக இரவு வாண வேடிக்கையுடன் மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
English Summary
palaiyur sakthi mariyamman mavilakku pooja