பெரம்பலூர் | பாலையூர் சக்தி மாரியம்மன் கோவில் மாவிளக்கு பூஜை.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

பக்தர்கள் அனைவரும் மாரியம்மனுக்கு மாலையணிந்து, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதன் பின்னர், பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். 

இதனை அடுத்து, பாலையூர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக இரவு வாண வேடிக்கையுடன் மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palaiyur sakthi mariyamman mavilakku pooja


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->