இன்று... இந்த ராசிக்காரர்கள் அமைதி காக்க வேண்டிய நாள்... இது உங்கள் ராசியா? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனச்சேர்வுகளால் வேலையில் கவனமின்றி விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். உடல்நலத்தில்  கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமற்ற சூழல்  உண்டாகலாம். நிதானத்துடன் செயல்படவும்.

ரிஷபம்:

தொழிலில் சக ஊழியர்களால் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். பாசன வசதிகள் மேம்படும். புதிய தொழில் சம்பந்தமான எண்ணங்களில் முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் சுபிட்சம் ஏற்படும்.

மிதுனம்:

பிள்ளைகளின் மூலம் ஆதரவான நிலை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்:

வேலை செய்யும் இடங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உறுப்பினர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். திட்டமிட்ட பணியில் சிறிது காலதாமத்திற்கு பின்பு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புதிய பொருட்களை  வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.

சிம்மம்:

மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். இணையம் தொடர்பான பணிகளில் தனவரவு மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எண்ணிய ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் வீண் அலைச்சல்கள் மற்றும் பதற்றம் உண்டாகலாம். 

கன்னி:

தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.

துலாம்:

தந்தைவழி உறவுகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளை பெறுவீர்கள். தொழிலில் அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். 

விருச்சகம்:

நிர்வாகத்துறையில் திறமைகளுக்கான அங்கீகாரம் மற்றும் கீர்த்தி உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். சொத்து சேர்க்கைக்கான முயற்சிகள் மேலோங்கும். தம்பதிகளுக்கிடையே உறவுகள் மேம்படும். கண் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமான செய்தியை அளிக்கும்.

தனுசு:

உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். தொழிலில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்க காலதாமதமாகும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற அவச்சொற்களை தவிர்க்கலாம்.

மகரம்:

அறசெயல்களால் மேன்மையுடைய நற்பேறுகள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழிலில் உள்ள மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களால் பொறுப்புகள் மற்றும் உயர்வு கிடைக்கும். கூட்டாளிகளால் தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் அமையும்.

கும்பம்:

செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். மற்றவர்களிடம் உரையாடும் போது கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்குவதற்கான ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம்:

வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் விரயம் ஏற்படும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வேலை விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 28 rasi palan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->