இன்றைய (27.05.19) ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு செய்த முயற்சி வெற்றி பெறும் நாள்!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஞாபக மறதியால் செய்யும் பணிகளில் காலதாமதம் உண்டாகும்.

ரிஷபம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கைக்கூடும். மனதில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மிதுனம்:

சாமர்த்தியமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பயணங்களின் மூலம் மனமகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். கெளரவ பதவிகளால் உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். 

கடகம்:

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் பழகவும். தூரத்து உறவினர்களிடமிருந்து கிடைக்கும் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

மனதிற்கு விருப்பமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தாயாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருந்த  எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். 

கன்னி:

அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வழக்கில் எதிர்பாராத தீர்ப்பு கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள்.

துலாம்:

பிள்ளைகளால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். இழுபறியான வேலைகள் விரைவில் முடியும். 

விருச்சகம்:

மனதிற்கு பிடித்த விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்.

தனுசு:

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள். திட்டமிட்டு செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயல்வீர்கள்.

மகரம்:

தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். திட்டமிட்ட பணிகளை சிறிது அலைந்து முடிக்க வேண்டிய சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்:

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சபைகளில் ஆதரவு  பெருகும். பூர்வீக சொத்துகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும்.

மீனம்:

பணி நிமிர்த்தமான பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேண்டுதல்களை குடும்பத்தினருடன்  சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுவிதமான நுட்பங்களை பற்றி கற்றுக் கொள்வீர்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 27 rasipalan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->