சொகுசான வாழ்க்கை உங்களுக்கு அமைய வாய்ப்பு இருக்கிறதா?
marriage horoscope 3
மணமகனின் களத்திர ஸ்தான அதிபதி லாபஸ்தானத்தில் பெண் ஜாதகத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த பெண் வந்த பின்பு அந்த மணமகனுக்கு தொழில் சார்ந்த முயற்சிகள் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு போன்றவற்றால் தனவரவுகள் யாவும் கிடைக்கப் பெறும் வாய்ப்புகள் உண்டாகின்றன.
ஆகவே கிரகங்கள் இருவருடைய ஜாதகத்தையும் நன்முறையில் இருக்கும் பட்சத்தில் இருவருக்குமே எதிர்பார்த்த இல்வாழ்க்கை என்பது அமையக்கூடியதாகும். சிலருக்கு திருமணம் ஆன பின்பு சொத்துச்சேர்க்கை என்பது பல வகையான இன்னல்களுக்கு நடுவே இருக்கக்கூடிய ஒன்றாகும்.
ஆயினும் தம்பதிகளான பின்பு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூலம் அவர்கள் எதிர்பார்த்த செல்வ செழிப்பான வாழ்க்கை சிலருக்கு அமையக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. அதாவது தம்பதிகளுக்கு இடையே உள்ள கிரக அமைப்புகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூலம் கிரக அமைப்புகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தை பிறந்து வளரும் தருவாயில் அவர்கள் எதிர்பார்த்த செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும் சூழல் உருவாக துவங்குகின்றது.
இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் சொகுசான வாழ்க்கைக் காண அனைத்து செயல்பாடுகளும் எண்ணிய வெற்றி அளிக்கக்கூடியதாக அமைகின்றது. திருமணத்திற்கு முன்பு ஆண் மகனோ அல்லது பெண் மகளோ செல்வம் இன்றி வறுமையில் வாழ்ந்து இருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்பு அவர்களின் நிலைகள் மாறுவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
ஏனெனில் தம்பதிகள் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய குறைகள் ஒருவர் ஜாதகத்தில் இருந்து மற்றொருவர் ஜாதகத்தில் நிறைகளாக மாற்றப்படுவதால் அவர்கள் சென்ற நேரம் அந்த குடும்பத்தில் முன்னேற்றமான வாய்ப்புகளையும் சூழலையும் உருவாக்குகின்றது. இது ஆண்மகன் ஆனாலும் சரி... பெண் மகள் ஆனாலும் சரி இருவருக்கும் இது சமமே ஆகும்.
ஒரு ஆண்மகனின் வெற்றி என்பது தனது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் நன்முறையில் இல்லாத பட்சத்தில் தனது துணையின் ஜாதகத்தில் தன்னுடைய கிரக அமைப்புகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை முன்னிலைப்படுத்தி நாம் செயல்படும் பொழுது ஒரு ஆண்மகனின் வெற்றி என்பது நிச்சயமாக நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்த விதி ஆண் மகனுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் இது பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
இதில் எந்த ஒரு கோபமும், பொறாமையும் இல்லாமல் இருக்கும்பொழுது அந்த குடும்பத்தில் முன்னேற்றம் என்பது படிப்படியாக நிகழக்கூடிய ஒன்றாக அமைகின்றது. அதாவது அவர்கள் எதிர்பார்த்த வீடு, மனை, வாகன சேர்க்கையும் உண்டாகும்.
எப்பொழுது தம்பதிகள் ஒருவருக்கொருவர் தங்களது பலம் பலவீனங்களை அறிந்து தங்களுக்குள் எழும் கருத்துக்களையும், எண்ணங்களையும் சரிசம அளவில் பரிமாறிக் கொள்ளும் பொழுது செல்வச்சேர்க்கையும், சொத்து சேர்க்கையும், ஏன் சகல சௌபாக்கியங்களும் அந்த இடத்தில் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியான இல்வாழ்க்கையை வாழத் தொடங்குகின்றனர்.