திருமணத்துக்கு பிறகு முக்கியமே இதுதாங்க... வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
marriage horoscope 2
மானிட வாழ்க்கையில் திருமணம் எவ்விதம் ஒரு முக்கியமான அத்தியாயமாக இருக்கின்றதோ அதற்கு அடுத்தபடியாக இருப்பது அந்த திருமண வாழ்வில் தன்னை நம்பி வந்தவருக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் மணமகனின் திறமையானது நிறைந்திருக்கக்கூடிய ஒன்றாகும்.
உத்தியோகம் என்பது புருஷ லட்சணம் ஆகும். ஆகவே, திருமணத்திற்கு பின்பு ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் என்பது அந்த ஆண்மகன் செல்லும் உத்தியோகம் மற்றும் தொழிலை பொறுத்தே அமையக்கூடியதாகும்.
திருமணப் பொருத்தத்தில் மனப்பொருத்தத்திற்கு பிறகு பார்க்க வேண்டியது தொழில் ஸ்தான பொருத்தமாகும். ஏனெனில் ஒருவருக்கு கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் குடும்பத்தை நடத்த இயலும்.
அவ்வாறு இருக்கையில் மணமக்களுக்கு மனப்பொருத்தம் இருக்கும்பட்சத்தில் வருவாய் இல்லாதபோது அவ்விடத்தில் மனப்பொருத்தம் என்பது குறையத் துவங்குகின்றது. மனப்பொருத்தம் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரைக்குமே அவர்களிடம் அன்புடன் இருக்க வைக்கின்றது. நாளடைவில் வருமானத்திற்காகவும், வறுமையில் இருந்து மீட்பதற்காக அவர்களும் ஓடத் தொடங்குகின்றனர்.
இதனால்தான் திருமணத்தில் மனப்பொருத்தத்திற்கு அடுத்து முக்கியமாக பார்க்கப்படுவது தொழில் மற்றும் வருவாய் தரும் பொருத்தமாகும்.
ஒரு ஆண்மகனின் தொழில் ஸ்தானாதிபதி பெண் ஜாதகத்தில் எந்த விதத்திலும் பலம் குன்றாமல் இருப்பதினால் அந்த பெண் வந்த பின்பு அந்த ஆண்மகனின் தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல்களும், வாய்ப்புகளும் உருவாகின்றன.
ஒருவேளை ஆணின் தொழில் ஸ்தானாதிபதி பெண்ணிடம் ஏதேனும் ஒருவிதத்தில் பலம் குன்றி இருந்தும் பெண்ணுடைய தொழில் ஸ்தானாதிபதி ஆண் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் அந்தப் பெண் மூலம் அந்த ஆண்மகனுக்கு பொருள் வரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஒருவேளை இருவருக்கும் தொழில் ஸ்தானாதிபதி ஒருவருக்கொருவர் இடம் பாதிக்கப்பட்டு இருக்கும்பட்சத்தில் அந்த தம்பதிகளுக்கிடையே தனம் சார்ந்த பிரச்சனைகள் தினம் தினம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
எனவே, திருமணப் பொருத்தத்தில் தொழில் ஸ்தானம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதேபோல ஆண் மகனுடைய வருவாய் தரும் ஸ்தானங்களான தன ஸ்தானம், லாப ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானம் ஆகியவை பெண் ஜாதகத்தில் கெடாமல் இருக்கும்பட்சத்தில் ஆண்களுக்கு வருவாய்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது.