இன்றைய ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகள் சிறப்பாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்:

சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். மனதில் அவ்வப்போது தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.

மிதுனம்:

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். தெய்வீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

கடகம்:

வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் மேன்மையான பலன்கள் உண்டாகும். ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரிகளிடம் சாதகமான சூழல் அமையும். மனதில் இருந்துவந்த துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

சிம்மம்:

வாக்குவன்மையால் லாபம் அடைவீர்கள். சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் தொடர்பான முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். மனை விருத்திக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி:

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணி புரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மற்றவர்களிடம் கொடுக்காமல் தாமே முடிப்பது நல்லது. எதிர்காலத்திற்கு தேவையான செயல்திட்டங்களை வகுப்பீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

விருச்சகம்:

கூட்டாளிகளின் உதவிகளால் சுபவிரயங்கள் உண்டாகும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

தனுசு:

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். அலைச்சல்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மகரம்:

புதிய தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேம்படும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம்:

பொதுநலத்திற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். தந்தைவழி சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய இடத்தை அடைவதற்கான லட்சியக் கனவுகளை உருவாக்குவீர்கள். இளைய சகோதரர்களின் உதவிகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். வாகனங்களில் கவனத்துடன் செல்லவும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mar 03 rasi palan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->