தலைமுறைக்கே லாபம் அளிக்கும் மகாளய பட்சம்... நாளை முதல் ஆரம்பம்.!
maakalaya patsam
மகாளய பட்சம் விளக்கம் :
மகாளயம் என்றால் மொத்தமாக ஒரே கூட்டமாக வருவது ஆகும். மறைந்த நம்முடைய முன்னோர்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் 15 நாட்கள்.
ஒரு குடும்பத்தில் மறைந்த முன்னோர் 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். இந்த மகாளய பட்சம் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இது தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது.
மகாளய பட்ச காலத்தில் என்ன செய்வது?
ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியிலும், சிரார்த்தம் முதலியன செய்யலாம்.
மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரும் வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். தீர்த்தக் கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.
தற்போது உங்கள் நினைவில் உள்ள தலைமுறையின் முன்னோர்கள் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
தலைமுறைக்கே லாபம் :
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்
முதல்நாள் பிரதமை - பணம் சேரும்.
2ம் நாள் துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்.
3ம் நாள் திரிதியை - நினைத்தது நிறைவேறும்.
4ம் நாள் சதுர்த்தி - பகைவர்களிடம் இருந்து தப்பிக்கலாம்.
5ம் நாள் பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
6ம் நாள் சஷ்டி - புகழ் கிடைக்கும்.
7ம் நாள் சப்தமி - சிறந்த பதவிகளை அடையலாம்.
8ம் நாள் அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைக்கும்.
9ம் நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும்.
10ம் நாள் தசமி - நீண்டநாள் ஆசை நிறைவேறும்.
11ம்நாள் ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி உண்டாகும்.
12ம் நாள் துவாதசி - தங்கநகை சேரும்.
13ம்நாள் திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் அமையும்.
14ம்நாள் சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை வந்து சேரும்.
15ம் நாள் முன் சொன்ன அத்தனை பலன்களும் மகாளய அமாவாசையன்று நம்மைச் சேர முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்.