பணத்தட்டுப்பாட்டை போக்கும்... லட்சுமி குபேரர்.! - Seithipunal
Seithipunal


பணவரவை அள்ளித்தரும் குபேர லட்சுமி:

குபேர லட்சுமி சிலை (தங்க நிறம்) 

ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்யவேண்டிய மிகச்சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இதனால் கிடைக்கப்பெறும் பலன் மிக மிக பெரிது.

பூஜை செய்யும் முறை :

இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து ஒரே நாளில் செய்யவேண்டும். ஒன்பது வாரம் பூஜை செய்ய நினைப்பவர்கள் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையன்று இப்பூஜையை செய்யலாம்.

அதேபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று இப்பூஜையை செய்யலாம். இப்பூஜையை ஒருவர் மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.

வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். பின்பு, பூஜை தடைபடாமல் இருக்க விநாயகரை வணங்கி கொள்ளவும்.

இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshmi kuberar special For money income


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->