உங்கள் எதிர்காலம் உங்கள் கைரேகையில்.. இந்த கை அமைப்பு உங்களுடையதா?..! - Seithipunal
Seithipunal


மனிதனின் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பல்வேறு சாஸ்திர முறைகள் இருந்தாலும் அதில் மிக எளிமையானதும், உறுதியானதுமான கலை, கைரேகை சாஸ்திரமாகும்.

உன் வாழ்க்கை உன் கையில் என்பது போல தத்துவக் கைகள் அமைப்பை கொண்டவர்களின் குணநலன்களை பற்றி காண்போம்.

தத்துவக் கையின் அமைப்பு :

இந்த வகை கைகள் முடிச்சு கைகள், வேதாந்த விசாரம் செய்கின்ற கைகள் என்று அழைக்கப்படும்.

கையின் அமைப்பு நீள வடிவத்துடன் இருக்கும். விரல் நுனிகள் நீள்வட்டத்தில் காணப்படும்.

கைவிரல் நகங்கள் நீளமாக இருக்கும். விரல் முனைகள் கூர்மையாக காணப்படும்.

விரல்களை ஒன்று சேர்த்தால் விரல்களுக்கு நடுவே ஓட்டைகள் காணப்படும்.

கைகளில் சதைப்பற்று இருக்காது. கையின் பின்புறத்தில் எலும்புகளும், நரம்புகளும் புடைத்து நிற்கும்.

தத்துவக் கையின் குணநலன்கள் : 

இவர்கள் பணத்திற்கு அதிக மதிப்பு அளிக்க மாட்டார்கள். தமக்கு தோன்றிய வழிமுறைகளில் செலவுகள் செய்வார்கள்.

மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள்.

சிறு விஷயத்திற்கும் கவலைப்படுவார்கள்.

இவர்கள் பிறருக்கு தீங்கு இழைக்க மாட்டார்கள்.

எதையும் யோசித்தே செய்வார்கள்.

இவர்கள் ரகசியத்தை காப்பாற்றும் தன்மை கொண்டவர்கள்.

தனிமையை விரும்புபவர்கள்.

பெரியவர்கள் மேல் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் கணக்கிடுதல், ஆராய்ச்சி செய்தல் போன்ற பணிகளில் இருப்பார்கள்.

இவர்களில் சிலர் அரசாங்க பதவி வகிப்பவராகவும், நல்ல பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Know about your future


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->