காமாட்சி அம்மன் விளக்கை வழிப்பட்டால் இந்த பலன்கள் கிடைக்கும்..!
Kamatchi Amman Vilakku workship
சிலருக்கு வாழ்வில் தீரா கடன் தொல்லை இருக்கும். அவர்கள் 48 நாட்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிப்பட்டு வர கடன் சுமை குறையும்.
காமாட்சி அம்மன் விளக்கு
காமாட்சி அம்மன் என்பது காமாட்சி அம்மன் அமர்ந்திருப்பது படி, இரண்டு பக்கமும் கரும்பு இருக்கும் விளக்குதான் காமாட்சி அம்மன் விளக்கு எனப்படும். மற்ற விளக்குகள் இருந்தாலும் இந்த பரிகாரத்திற்காக புது விளக்கை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
விளக்கு ஏற்றும் முறையும் வழிபாடும்:
இந்த விளக்கை தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, அரிசி மாவில் கோலம் ஒன்று போட்டு கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் அந்த கோலத்தின் மேலே ஒரு சிறிய தட்டை வைத்து அந்தத் தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும்.
அந்த காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். இந்த விலக்கிற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டி குலதெய்வத்தையும் காமாட்சி அம்மனையும் மனதார வழிபடுங்கள்.
விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும். குலம் தழைக்கும். கிரக தோஷங்கள் தீரும். செல்வம் செழித்து வறுமை நீங்கும். மேலும், வழக்குகள் வெற்றி அடையும்.
English Summary
Kamatchi Amman Vilakku workship