உங்கள் கையில் உள்ள மணிக்கட்டு வரிகள் என்ன சொல்கிறது? - Seithipunal
Seithipunal


ஒருவரின் ரேகையை வைத்து ஜெனன ஜாதகத்தை அறிய முடிவது போல, ஜெனன ஜாதகத்தை வைத்து ரேகையை அறிய முடியாது.

உள்ளங்கையில் இருக்கும் கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்வது கைரேகை சாஸ்திரம் ஆகும்.

உள்ளங்கை ரேகையை வைத்து மட்டுமல்ல மணிக்கட்டு ரேகையை வைத்தும் ஒருவரது வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் மணிக்கட்டில் ஓரிரு வரிகள் ரேகை போன்று அமைந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.

முதல் வரி :

மணிக்கட்டில் முதல் வரியானது மிகவும் தெளிவாகவும், பிரிவு இல்லாமலும், நெளிவுசுளிவு இல்லாமலும் இருந்தால் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

தெளிவாக இல்லாமல் பிரிவுடன் இருந்தால் பொறுப்புடன் செயல்படுபவராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும் இருப்பார்கள்.

இரண்டாவது வரி :

இரண்டாவது மணிக்கட்டு வரியானது தெளிவாக இருந்தால் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி முதலியவற்றை குறிக்கிறது. மேலும் உடல்வலிமை நன்றாகவும், வாழ்க்கை சிறப்பாகவும் இருக்கும்.

இரண்டாவது மணிக்கட்டில் பிரிவுகள் இருந்தால் சற்று தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மூன்றாவது வரி :

மணிக்கட்டில் மூன்றாவது வரியானது வேலை மற்றும் தொழில் ஆகியவற்றை குறிக்கிறது.

மூன்றாவது வரியானது பிரிவு மற்றும் நெளிவுசுளிவுடனும் இல்லாமல் இருந்தால் செய்யும் தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

நான்காவது வரி :

மணிக்கட்டில் நான்காவது வரியானது மிகவும் அரிதாகவே காணப்படும்.

ஒருவரது மணிக்கட்டு வரிகளில் கொக்கி போன்ற குறி ஏதேனும் இருந்தால் அவர்கள் ஆளுமை திறன்மிக்கவர்களாக இருப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kairegai palan 36


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->