தினம் தினம் திருநாளே... இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தடைபட்டுவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிரிந்த நபர்கள் தானாக வந்து பேசுவார்கள். புதுவிதமான எண்ணங்களால் சாதகமான முடிவுகள் உண்டாகும்.

ரிஷபம்:

நண்பர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். 

மிதுனம்:

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். மனதில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்:

தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். தடைபட்டு வந்த சுபச்செயல்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வாகனச்சேர்க்கை உண்டாகும். 

சிம்மம்:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்களால் சரியான முடிவை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.

கன்னி:

எதிர்பார்த்த செயல்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் மேம்படும். செய்யும் பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். 

துலாம்:

எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் இன்பம் பெருகும். பிள்ளைகளால் தொழில் வகை ஆதாயம் உண்டாகும்.

விருச்சகம்:

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.

தனுசு:

உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள். 

மகரம்:

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பழைய கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கடையை மாற்றவது குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

உயர் அதிகாரிகளிடம் நிதானமாக உரையாடவும். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். 

மீனம்:

கெளரவப் பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். சமூகச்சேவை புரிவோருக்கு சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 29 rasi palan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->