ஐய்யப்பன் கோவில் நடை இன்றுடன் மூடல்- தேவஸ்தானம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சபரிமலையில் நடைபெற்று வந்த மண்டல பூஜைகள் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்த நிலையில் இன்று நடை மூடப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனையடுத்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தினசரி தரிசனத்திற்கு எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டதுடன், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர், பம்பை நதியில் குளிக்கவும், மண்டபங்களில் தங்கவும் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றுடன் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் மற்றும் தரிசனம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலையுடன் நடை மூடப்பட்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iyyapan kovil today onwards closed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->