சாதாரண வீடும்... இனிமையான இல்லமாக மாற... இதை செய்தாலே போதும்...!! - Seithipunal
Seithipunal


சொந்தம்பந்தம், சந்தோஷம், பாசம், இன்பம், துன்பம் இப்படி எல்லாமும் கலந்து கட்டப்பட்டது தான் ஒரு இல்லம். நமது வீட்டை சந்தோஷம் நிறைந்த, சொந்தபந்தங்கள் சேர்ந்த, இனிமையான இல்லமாக மாற்ற வேண்டும் என்றால், வீட்டில் சண்டை சச்சரவுகள் என்பது இருக்கக்கூடாது, சுபகாரியத் தடை இருக்கக்கூடாது, கெடுதல்கள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கக்கூடாது என்பது முக்கியம்.

எந்த ஒரு வீட்டில் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றதோ, அந்த வீட்டில் சுபிட்சம் இருக்காது. மகாலட்சுமி மனநிறைவோடு வீட்டில் தங்கமாட்டாள். வீட்டில் வரக்கூடிய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான மிக மிக எளிய வழிபாட்டு முறையை பற்றி இங்கு பார்க்கலாம்.

முதலில் மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் முகம் கழுவி, தலை திருத்தி, பொட்டு இட்டுக்கொண்டு, முடிந்தால் தலைநிறைய பூ வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு, பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். பூஜை அறையில் தரையில் மஞ்சளைக் கொண்டு நட்சத்திர கோலம் வரைய வேண்டும். இந்த மஞ்சள் நட்சத்திரக் கோலம் வீட்டில் மன அமைதியைக் கொடுக்கும். சண்டை சச்சரவுகளை தீர்க்கும். தேவையற்ற அசுபகாரியங்கள் நடக்காமல் தடுக்கும்.

மஞ்சள் பொடியைக் கொண்டு வரையப்பட்ட நட்சத்திரக் கோலத்தில் மேலே இரண்டு வேப்பிலைகளை வைக்க வேண்டும். இந்த வேப்பிலையானது, வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை அழிக்கும். 

அந்த வேப்பிலையின் மேல் இரண்டு மண் அகல் தீபத்தை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தாலே போதும். தொடர்ந்து இந்த தீபத்தை 48 நாட்கள் ஏற்றி வைப்பதால் சாதாரண வீடும், இனிமையான இல்லமாக, இனிமையான கோவிலாக மாறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே இல்லை. 

தினமும் அந்த பழைய மஞ்சள் நட்சத்திர கோலத்தை துடைப்பத்தால் சுத்தம் செய்யக்கூடாது. ஒரு சுத்தமான துணியை கொண்டு ஒரு பேப்பரில் எடுத்து, கால் படாத இடத்தில் மஞ்சளை கொட்டிவிடலாம். 

மீண்டும் புது மஞ்சளை வைத்து தான் கோலம் வரைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 48 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்ற முடியாது என்று சொல்பவர்கள் கூட, வீட்டில் சண்டை சச்சரவுகள் திடீரென்று அதிகமாக உள்ளது. 

வீட்டில் சுப காரியத்தை நடக்கவே முடியவில்லை, வெள்ளிக்கிழமை பூஜை கூட செய்ய முடியவில்லை, மனசு ஏதோ சஞ்சலமாக உள்ளது எனும் பட்சத்தில் உடனடியாக இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் உடனடியாக அகற்றப்பட்டு வீட்டில் நிம்மதி நிலவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

home problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->