வாழ்வில் இன்னல்களை நீக்கும் அனுமன் மந்திரம்..!
Hanuman Manthra
அனுமனை வணங்குவதால் நம் பிரச்சனைகளில் இருந்து நமக்கு தீர்வு கிடைக்கும். சில நேரங்களில் நாம் சோர்ந்து போய் இருப்போம். அப்போதெல்லாம் நாம் அனுமன் ஸ்லோகம் சொல்வதன் மூலம் நம் மனம் பலம் பெறும்.
புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம்
வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
அதாவது அறவில் வலிமை, புகழ், துணிவு, நோயின்மை, பயமின்மை, ஊக்கம், பேச்சுவலிமை ஆகியவை நாம் அனுமனை வணங்கினால் கிடைக்கும் என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.
இந்த மந்திரத்தை பொருளுணர்ந்து சொன்னால் மனபலம் ஏற்படும். அனுமனை வணங்குவதன் மூலம் நாம் எண்ணிய காரியம் ஈடேறும்.