குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020 - இந்த ராசிக்காரருக்கு கவனம் தேவை...!! - Seithipunal
Seithipunal


கன்னி ராசி :

இதுவரை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்த குருதேவர் வருகின்ற குருப்பெயர்ச்சியில் நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களின் ஆதரவால் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.

இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து அஷ்டம ஜீவன மற்றும் அயன சயன ஸ்தானத்தையும் பார்க்கின்றார். கடன் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்பட்ட மனவருத்தம் அகலும். பயனற்ற அலைச்சல்களால் சில நேரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மாமன், மைத்துனரின் ஒத்துழைப்பு உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழலை உருவாக்கும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யப்படும். விரயங்கள் குறைந்து லாபம் பெருகும். உத்தியோகத்தில் சம வயதினரால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு :

வெளிநாட்டு பயணம் மூலம் அரசியலில் வெற்றி காண்பீர்கள். இதுவரை இருந்துவந்த சங்கடங்கள் மற்றும் அவப்பெயர்கள் யாவும் அகலும். மேடைப் பேச்சுக்கள் மூலம் உங்கள் புகழ் மேலோங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும் அதனால் மனதில் புதுவிதமான நம்பிக்கையும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :

நாடகக் கலையை தொழிலாக மேற்கொண்டவர்களுக்கு வருகின்ற குருப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். தூரதேச பயணம் மூலம் பல சவால்களை வென்று காட்டுவீர்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு தங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

விவசாயிகளுக்கு :

புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு விவசாயத்துறையில் புதுவிதமான மாற்றத்தை செய்வீர்கள். மின் காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கிழங்கு வகைகளின் விளைச்சல் அமோகமாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகள் மூலம் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு :

தாயிடம் இருந்துவந்த சிறு சிறு மனசங்கடங்கள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு கைகொடுக்கும். தொழில் சார்ந்த ரகசியங்களை பகிரும்போது சிந்தித்து செயல்படுவதினால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

மாணவர்களுக்கு :

அடிப்படை கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியில் சிறிது முயற்சியை துரிதப்படுத்துவது அவசியம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு படிப்பு முடிந்தவுடன் சிறந்த இடத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். படிப்பு மற்றும் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களுக்காக வெளியூர் சென்று வருவீர்கள்.

வியாபாரிகளுக்கு :

சுயதொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் புதுவிதமான மாற்றங்களை செய்து வெற்றி காண்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். தொழிலில் இதுவரை இருந்துவந்த முடக்க நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள்.

வழிபாடு :

மாதம்தோறும் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து துளசியினால் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு வர சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guru peyarchi 2019 in kanni rasi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->