தொழில் விருத்திக்கு தினம் இந்த ஸ்லோகத்தை கூறுங்கள்..!!
Durga slokens
சிலருக்கு தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்படும் அவர்கள் தினமும் துர்கை ஸ்லோகத்தை சொல்லலாம்.
சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் நஷ்டம் ஏற்படும். அதனால் மன உளைச்சல் குடும்பத்தில் சச்சரவு போன்றவை ஏற்படும். இவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வர அவர்களின் தொழில் விருத்தி அடையும்.
“கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:
சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ
நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்”
திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம். என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள் ஆகும்.