வைகாசி மாசத்துல கத்தரிக்காய் சாப்பிடாதீங்க.. தண்ணீரை வீணாக்காதீங்க.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவிங்க..!
Do not eat brinjal in the month of Vaikasi
சித்திரை மாதம் முடிந்து, வைகாசி மாதம் நாளை தொடங்கவுள்ளது. இந்த வைகாசி மாதத்தில் நமது வளமான வாழ்க்கைக்கு என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை எல்லாம் தவிர்க்க வேண்டும், எந்த தெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாதம்
பருவநிலையில் மாற்றம் ஏற்படும் மாதம் வைகாசி. இந்த மாதத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து, வசந்த காலத்தின் இதமான காற்று வீச தொடங்கும்.இந்த மாற்றமானது வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள், துன்பங்களை நீக்கி, மாற்றத்தையும், சுகத்தையும் ஏற்படுத்தும் மாதம் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.
வைகாசி மாதத்தில் செய்ய வேண்டியவை:
தானம்:- வைகாசி மாதத்தில் தானம் செய்வது மிகவும் நல்லது. (எப்போது செய்தாலும் நல்லது) குறிப்பாக, வைகாசியில் எள் தானம் செய்வது விஷ்ணு பகவானை மகிழ்விக்கும். இதனால் விஷ்ணு பகவான் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார் என்றும் அகால மரண பயம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

அனுமன் வழிபாடு:- இந்த மாதத்தில் அனுமனை வழிபடுவதால் கஷ்டங்களை நீக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் தான் ஸ்ரீ ராமர், அனுமனை சந்தித்தார். அதனால் இந்த மாதம் அனுமனுக்கு மிகவும் பிடித்த மாதம். ஆக வைகாசி மாதத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாமல் வழிபடுவதால் நல்ல பலன் கிடைக்குமாம். இதனால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
ஒரு வேளை உணவு:- இந்த வைகாசி மாதத்தில் ஒரு வேளை உணவு சாப்பிடுவது செல்வந்தர் ஆக்குமாம். இப்படி செய்தால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் பெருகுவதோடு, ஒரு வேளை உணவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், மருத்துவ செலவு மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
தண்ணீர் தானம்:- தண்ணீர் தானம் செய்வதோடு, தினமும் காலையில் குளித்து விட்டு, விலங்குகளுக்கும், தாகமாக இருப்பவர்களுக்கும் தண்ணீர் கொடுப்பதால் புண்ணியம் கிடைக்கும், கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

வைகாசி மாதத்தில் தவிர்க்க வேண்டியவை:
கத்தரிக்காய்:- வைகாசி மாதத்தில் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம், ஏனெனில், கத்தரிக்காய் சாப்பிடுவதால் தோஷம் ஏற்படும் என்று நம்பப்படுவதோடு, ஆயுர்வேதத்தின்படி, இந்த மாதத்தில் கத்தரிக்காய் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், உடலில் வாத நோயை அதிகரிக்கும் என்றும், உடல் சூட்டை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
பகலில் தூங்குவது:- இந்த மாதத்தில் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டுமாம். பொதுவாகவே பகலில் தூங்குவது நல்லதல்ல என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த மாதத்தில் பகலில் தூங்குபவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் எப்போதும் இருந்து கொண்டே இருக்குமாம்.

வெயிலில் நடப்பது:- வைகாசி மாதத்தில் வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது.
தண்ணீரை வீணாக்குவது:- தண்ணீரை வீணாக்குவதை தவிர்க்க வேண்டுமாம். மீறியும் நீங்கள் தண்ணீரை வீண் செய்தால் வருண தோஷம் ஏற்படுமாம், இதனால் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
English Summary
Do not eat brinjal in the month of Vaikasi