முக்கிய ஆலோசனையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!!
cm stalin meeting for friday temple open
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். விஜயதசமிக்கு கோயில்களை திறப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ வல்லுநர் குழு உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜயதசமி அன்று கோவில்கள் திறப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
விஜயதசமி அன்று கோவில்கள் திறப்பது குறித்து அரசு முடிவு செய்துகொள்ளலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் என்று மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் தமிழகத்தில் 9 முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுப்பது குறித்தும், பண்டிகை காலத்தை ஒட்டி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
English Summary
cm stalin meeting for friday temple open