நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணத்தை தெரிஞ்சிக்கலாமா.!  - Seithipunal
Seithipunal


நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணாதியங்களை தெரிந்து கொள்வோம்..

திங்கள் : திங்கள் கிழமைப் பிறந்தவர்கள் தன்னைத் தானே மிகவும் ஊக்கப்படுத்திக்கொள்வார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள். தன்னுடைய இன்ப துன்பங்களை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள். படிப்பில் ஆரம்ப காலத்தில் பின்னோக்கி இருந்தாலும் பின் தன் சுய உந்துதலால் நல்ல நிலையை அடைவார்கள்.

செவ்வாய் : வார்த்தைகளை யோசிக்காமல் பட்டென பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். யாருக்கும் பயம் இல்லாதோர். இதனால் அவர்கள் உறவுமுறைகளுக்குள் நீண்ட நாட்கள் ஒத்து வாழுவதில் சிக்கலாகவே இருக்கும். அவர்களுக்குள் எப்போதும் ஒரு ஈகோ இருக்கும்.

புதன் : மதம் , ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். கடவுளுக்கு எப்போதும் பயந்து செயல்படும் பழக்கம் கொண்டிருப்பதால் தவறுகள் செய்வதானாலும் தயங்குவார்கள். மென்மையானவராகவும், அன்பானவராகவும் இருப்பார்கள். மற்றவர்களை மதிப்பதில் முன்னோடியாக இருப்பார்கள். எந்த வேலையானாலும் மூளையைப் பயன்படுத்தி செயல்படுவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இதனால் எளிதில் அவர்களை ஏமாற்றிவிட முடியாது.

வியாழன் : மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். சாகச விரும்பியான இவர்கள் கடுமையான சிக்கல்களையும் தன்னுடைய தெளிவான முடிவு , புத்திசாலித்தனத்தால் அழகாகக் கையாளுவார்கள். சுற்றார், உறவினர்கள் , நண்பர்களின் அதீத அன்பு மற்றும் அக்கறையுமே உங்கள் வாழ்க்கையின் பலமாக இருக்கும். அதிர்ஷ்டம் எப்போதும் உங்கள் வசம் இருக்கும்.

வெள்ளி : எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் தனித்துத் தெரியும் நபராக இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை நிறைந்தவராகவே தெரிவார்கள். தன்னை சுற்றி இருப்போரை தன் பேச்சாலேயே கவரக் கூடியவர்.எத்தனை பிரச்னைகளையும் எளிதில் சிரித்துக் கொண்டே கையாளுவார்கள்.

சனி : இவர்களுக்கு விவசாயம், தொழில் நுட்பம், ஏற்றுமதி இறக்குமதிகளில் எப்போதும் ஆர்வம் இருக்கும். சிறு வயது வரை போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் இவர்கள் வளர வளர பக்குவப்பட்டு திறமையாக வாழ்வார்கள். மனிதர்களை உடனடியாக கனித்து அதற்கு ஏற்ப பேசும் குணம் கொண்டவர்கள். உறவுகள் , நண்பர்கள், உடன்பிறந்தவர்களோடு உறவுமுறையை பக்குவமாக கொண்டு செல்ல கவனமாக செயல்படுவார்கள்.

ஞாயிறு : மனிதர்களோடு எளிதில் பேச மாட்டார்கள். அப்படியே பேசினாலும் குறைவான உரையாடலையே கொண்டிருப்பார்கள். கல்வியில் சிறந்து விலங்குவார்கள். இதனால் பல மரியாதைகள், அங்கீகாரங்களைப் பெறுவார்கள். குடும்பத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

birth day to know your character


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->