போகியன்று ஏன்‌ பழையதை கழிக்க சொன்னாங்க..? அதற்கு பின்னால்‌ இருக்கும்‌ மறைந்து போன சாங்கியம்‌.! - Seithipunal
Seithipunal


போகி மார்கழி மாதத்தின்‌ கடைசி நாளன்று அதாவது பொங்கல்‌ திருநாளின்‌ முதல்நாள்‌ கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின்‌ இறுதி நாளையே போகிப்‌ பண்டிகையாக தமிழ்‌ நாட்காட்டியில்‌ குறிப்பிடுகிறார்கள்‌. பரவலாக போகிப்‌ பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப்‌ பிரதேசம்‌ மற்றும்‌ தெலுங்கானா மாநிலங்களில்‌ கொண்டாடப்படுகிறது.

இந்த நாள்‌ 'பழையன கழித்து, புதியன புகவிடும்‌' நாளாகக்‌ கருதப்படுகிறது. பழையவற்றையும்‌, பயனற்றவையும்‌ விட்டெறியும்‌ நாளாகக்‌ கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப்‌ போக்கும்‌ இப்பண்டிகையைப்‌ "போக்கி' என்றனர்‌. அந்தச்‌ சொல்‌ நாளடைவில்‌ மருவி "போகி! என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின்‌ கடைசிநாள்‌ என்பதால்‌ நடந்து முடிந்த நல்‌ நிகழ்வுகளுக்கு நன்றி கூறும்‌ நாள்‌ போகி என்போரும்‌ உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும்‌ நாள்‌ போகிப்‌ பண்டிகையாகும்‌.

வீட்டில்‌ உள்ள பழைய மற்றும்‌ தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில்‌ புதியன வந்து புகுதல்‌ வேண்டும்‌ என்ற நம்பிக்கையில்‌ மக்கள்‌ போகிப்‌ பண்டிகையைக்‌ கொண்டாடுகிறார்கள்‌. அன்றைய நாள்‌, வீட்டில்‌ தேங்கிப்‌ போயிருக்கும்‌ குப்பைகள்‌ தேவையற்ற பொருட்கள்‌ அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்‌.

இவற்றோடு பழைய பழக்கங்கள்‌, ஒழுக்கக்‌ கேடுகள்‌, உறவுகளிடம்‌ ஏற்பட்ட மனக்கசப்புகள்‌ போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும்‌ "ருத்ர கீதை ஞான யக்ஞம்‌” என அழைக்கப்படும்‌ அக்னி குண்டத்தில்‌ பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில்‌ இருக்கும்‌ தீய எண்ணங்களையும்‌, தவறான எண்ணங்களையும்‌ நீக்க வேண்டும்‌ என்பது இதில்‌ உள்ள தத்துவமாகும்‌. பல்வேறு தெய்வீகக்‌ குணங்களை தூண்டுவதன்‌ மூலம்‌ ஆன்மாவை உணர்தல்‌, ஆன்மாவை தூய்மையாக்குதல்‌ போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.

பெரும்‌ பொங்கல்‌, மகர சங்கராந்தி மற்றும்‌ லோரி எனப்படும்‌ பண்டிகைக்கு முந்தைய நாளில்‌ போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டியே பொங்கலுக்கு முன்‌ வீட்டிற்கு புது வர்ணம்‌ பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள்‌. வீட்டின்‌ முன்வாயில்‌ நிலைக்குப்‌ மஞ்சள்‌ பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச்‌ சாத்தி நிற்கச்‌ செய்து வாழைப்பழம்‌, வெற்றிலை, பாக்கு, குங்குமம்‌ வைத்து, தேங்காய்‌ உடைத்து,கற்பூரம்‌ காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர்‌. சிறு மணித்துளிகளில்‌ இது முடிவுறும்‌. இதைக்‌ குடும்பத்தலைவி நடத்துவார்‌. போகிப்‌ பண்டிகையின்‌ போது போளி, வடை, பாயசம்‌, மொச்சை, சிறுதானியங்கள்‌, பருப்பு வகைகள்‌ போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்‌. மழை பொழிய வைக்கும்‌ கடவுள்‌, வருணன்‌. அவனுக்கு அரசனாகத்‌ திகழ்ந்து இயக்குபவன்‌ இந்திரன்‌. வேதத்தில்‌ இந்திரனை பற்றிய துதிகள்‌ பல இடம்‌ பெற்றுள்ளன. மார்கழி மாதம்‌, சாதாரணமாகவே சூரியோதய காலத்தில்‌ பூஜை, தியானம்‌ போன்றவற்றில்‌ ஈடுபடுவது நல்லது.

மார்கழி மாதம்‌ பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின்‌, தை வந்த பிறகு தான்‌ கல்யாணம்‌ போன்ற சுபகாரியங்கள்‌ நடைபெறும்‌. பகவத்‌ சம்பந்தமான மங்கள காரியங்கள்‌ மார்கழி மாதத்தில்‌ நடைபெறும்‌. காக்கை முதல்‌ அனைத்து உயிரினங்களுக்கும்‌ உணவிடுவது போகிப்‌ பண்டிகையின்‌ விசேஷம்‌. போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின்‌ முன்பாக, வீட்டில்‌ இருக்கும்‌ தேவை இல்லாத பழைய துடைப்பம்‌ போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள்‌.

இதனால்‌ வீட்டில்‌ இருக்கும்‌ திருஷ்டி கழியும்‌ என்பது ஒரு ஐதீகம்‌. பிறகு வீட்டின்‌ வாசலில்‌ அழகான கோலம்‌ போடவேண்டும்‌.

புகையில்லா போகி:

இப்போதெல்லாம்‌ போகியன்று "டயர்‌ களைக்‌ கொளுத்தும்‌ மூடத்தனம்‌, பரவலாக நடக்கின்றது. இதனால்‌ வளி மண்டலம்‌ மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோய்‌ ஏற்படுகிறது. எனவே போகி பண்டிகை அன்று நமக்கு பயன்படாத பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பழைய டயர்கள்‌ மற்றும்‌ பயன்படாத பழைய பொருட்களை எரிக்காமல்‌ அவற்றை தேவையானவர்களுக்கும்‌ இல்லாதவர்களுக்கும்‌ கொடுத்து உதவலாம்‌.இதன்‌ மூலம்‌ புகையில்லாத மாசற்ற போகி பண்டிகையை கொண்டாடி சுற்று சூழலை பாதுகாக்க பொதுமக்கள்‌ ஒத்துழைக்க வேண்டும்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhogi special 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->