சனிப்பெயர்ச்சியினால், பண மழையில் நனைய போகும் ராசிகள்.! முயற்சிகள் கைகூடும் காலம்.!  - Seithipunal
Seithipunal


சனிபகவான் நீதி கடவுளாக பார்க்கப்படுகிறார். இவரது மாற்றமானது 12 ராசிகளையுமே வெவ்வேறு பாதிப்பிற்கு ஆளாக்கும். அவரது செய்கைகளுக்கு ஏற்றவாறு சனி பகவான் பலனை கொடுப்பார். வரும் தீபாவளி நாள் முதல் மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். எனவே எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். 

மேஷ ராசியின் பத்தாவது வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் அவர்களது வணிக நிலவரம் நன்றாக இருக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, வணிகம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம். புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

வக்ரமாகும் சனி.. இந்த 3 ராசிகளும் பயங்கர உஷாராக இருக்கணும்.. பெரும் இழப்பு  ஏற்படலாம்.! - Seithipunal

தனுசு ராசியின் இரண்டாவது வீட்டிற்குள் சனி நுழைகிறார். எனவே, உங்களுக்கு திடீரென பணவரவு ஏற்படும். ஆங்காங்கே சிக்கி இருந்த பணம் இப்பொழுது வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். நிதிநிலை இந்த காலகட்டத்தில் வலுவாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இது தக்க சமயம். உடல் நலத்தில் சற்று கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம். 

மீன ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளித் தருகின்ற நேரம் இது. சனிபகவான் உங்கள் ஜாதகத்தின் பத்தாவது இடத்தில் இருக்கிறார். இது லாப ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. எனவே, புதிய புதிய வருமானங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் .இதன் மூலம் எதிர்காலம் புது பாதைக்கு செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தொழிலில் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits for sanipeyarchi after diwali


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->