அஷ்டமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா?..!!
Ashtami thidhiyil kuladheyva vazhipaadu
1.அஷ்டமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா?
அஷ்டமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்யலாம்.
குலதெய்வத்தை எல்லா தினங்களிலும் வழிபாடு செய்யலாம்.
2.நான் காவி நிற உடை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான நிலையில் இருப்பதை குறிக்கின்றது.
3.மிகப்பெரிய மலையை கனவில் கண்டால் என்ன பலன்?
மிகப்பெரிய மலையை கனவில் கண்டால் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.
4.பறந்து கொண்டே இருக்கக்கூடிய விமானத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்வது தேவையற்ற பகை உருவாவதை தவிர்க்கும் என்பதைக் குறிக்கின்றது.
5.வீட்டின் கழிவறையை வடகிழக்கு மூலையில் அமைக்கலாமா?
வீட்டின் கழிவறையை வடகிழக்கு மூலையில் அமைக்கக்கூடாது.
6.வீடு முழுவதும் தீபம் ஏற்றி அலங்காரம் செய்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
7.ஈசான்ய மூலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாமா?
ஈசான்ய மூலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாம்.
8.சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
சிவலிங்கத்தை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
Ashtami thidhiyil kuladheyva vazhipaadu