வருகிறது சனிப்பெயர்ச்சி... அர்த்தாஷ்டம சனி நல்லதா?... கெட்டதா?
arthashdama sani
சனிதேவர் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்வது அர்த்தாஷ்டம சனி ஆகும்.
உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி மருத்துவ செலவுகளால் சேமிப்புகளை விரயம் செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும் வம்பு, தகராறு, கலகம் செய்து தனக்கு ஏற்படக்கூடிய இன்பத்தை தானே கெடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே, கவனமாக இருக்கவும்.
புதிய தொழில் முயற்சிகள் சரியாக அமையாமல் முயற்சிகளை கைவிடும் நிலைக்கு கொண்டு செல்ல நேரிடும்.
வாகனங்களால் விபத்துகளை ஏற்படுத்தி உடல் சுகங்களை கெடுக்க வாய்ப்புண்டு.
உறவுகளால் வருத்தங்கள் ஏற்படும். கல்வியில் தடை, மந்த தன்மையை ஏற்படுத்தும்.
பழைய வீடுகளை புதுப்பித்து அங்கு குடியேற்றம் செய்ய வைக்கும். தாயின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
கிரகங்களின் பார்வை, லக்ன அசுபர் மற்றும் சுபர் என்ற நிலைக்கு ஏற்ப தன் செயல்பாடுகளை உண்டாக்கும்.
பஞ்சம சனி :
சனிதேவர் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நிலையே பஞ்சம சனி என்று அழைக்கப்படுகிறது.
தெளிவான சிந்தனைகள் இல்லாமல் மனதில் தேவையற்ற குழப்பங்களுடன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் சோர்ந்து இருக்கும் சூழலை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடலாம்.
பிள்ளைகளுக்கு உடல் நிலையில் ஆரோக்கிய குறைபாடு உண்டாகலாம்.
இந்த நிலையில் உள்ள சனிதேவர் மத்திமமான தீவினைகளை ஏற்படுத்துவார். அதிக தீவிரம் இருக்காது. ஓரளவு பணவரவு கிடைக்கும்.