அப்பாவி மக்களின் வீடுகளை கொளுத்தி, சாதிய மோதலுக்கு பிளான்.. விஷயமே தெரியாத வகையில் பின்வாங்கிய கட்சி... கொந்தளிக்கும் பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் மதிமுக கட்சியைச் சார்ந்த மாவட்ட பொறியாளர் அணி செயலாளராக பணியாற்றி வருபவர் சத்யா. இவர் அதே பகுதியைச் சார்ந்த தொலைக்காட்சி நிருபரை தாக்கியதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து அங்குள்ள அப்பாவி மக்களின் விவசாய நிலத்தில் புகுந்த கும்பலானது அவர்களின் வயல் வெளியை சேதப்படுத்தியும், தீயிட்டு கொளுத்தியும் அராஜகம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக விசாரிக்கையில், மதிமுக கட்சியை சேர்ந்த சத்யா என்பவருக்கும், தனியார் தொலைக்காட்சி நிருபருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், நிருபர் தரப்பு நபர்கள் திட்டமிட்டு சாதிய வன்முறையை ஏற்படுத்தும் வகையில் அப்பாவி நபர்களின் விவசாய நிலங்களை சேதமடைய செய்தது தெரியவந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக, மதிமுக கட்சியில் இருந்தும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. அப்பாவி நபர்களின் விவசாய நிலத்தில் அராஜகம் செய்து சாதிய மோதல் உண்டாகி லாபம் அடைய ஒரு தரப்பில் திட்டமிட்டுள்ள நிலையில், இதுகுறித்து மதிமுக கட்சித் தலைமையோ அல்லது அவர்களின் கூட்டணியில் உள்ள திமுக கட்சித் தலைமையோ எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது. 

இதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட நபர் தாழ்த்தப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் பிரதான கட்சியான திமுக முதல் ஆளாக குரல் கொடுக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர் வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்று தெரிந்து எந்த விதமான கண்டனமும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றது பெரும் வருத்தத்தை அளிப்பதாக இணையதளத்தில் பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த பிரச்சனையை பெரிதாக்கி, மதிமுக கட்சி நபரை மாற்றுக்கட்சி நபராக சித்தரித்து, அரசியலில் இலாபம் பார்த்து, சாதிய வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இரு நபர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை அவரவர் பேசித் தீர்த்துக் கொள்ளாமல், இந்த விஷயத்தை அரசியலாக்கி சாதிய வன்முறை ஏற்படுத்தும் வகையில் ஒரு தரப்பு செயல்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அப்பாவி மக்களின் தோட்டத்தில் தீ வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram Caste fight created by vck party member peoples got angry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->