குறளுக்கு குறள் போட்ட வைரமுத்து.. சின்மயியின் பதில்.. வைரத்தை வச்சு செய்த நெட்டிசன்கள்.!!
Vairamuthu Trolled by Social Media Handlers in Twitter
இந்திய பிரதமர் மோடி லடாக்கிற்கு சென்று எல்லை விபரங்களை நேரில் கேட்டறிந்தார். இதன்பின்னர் இராணுவ வீரர்களிடையே உரையாற்றிய மோடி தமிழ் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியிருந்தார். இதற்கு தமிழகம் தரப்பில் பல வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் " படைவீரர்களுக்கான உரையில் படைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.
‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு’ - என்ற இன்னொரு குறளையும் அவர் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்கிறோம் என்று பதிவு செய்துள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் ஒருதரப்பில் ஆதரவு தெரிவித்தாலும், கவிஞர் வைரமுத்து சின்மயி பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது தமிழகம் முழுவதும் அறிந்த விஷயமாகும். #Metoo ட்ரெண்டிங்கில் சென்ற நாட்களில் வைரமுத்து தொடர்பாக பல பரபரப்பு தகவலை சின்மயி கூறியிருந்தார்.
தற்போது பிரதமரின் குறளுக்கு மறுகுறள் பதிவு செய்த வைரமுத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், குறித்த நபரொருவர் இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில்,
" பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு " - என்ற குரலை மேற்கோள்காட்டி சின்மயியை டேக் செய்துள்ளார்.
இதனைக்கண்ட சின்மயியும் பாலியல் குற்றவாளிகளை நல்லவர்கள் என்று கூற கூடாது.. இவரது சேர்க்கை சரியில்லாததால் பல செயல்கள் செய்துள்ளார். இவரது குழுவுடன் சேர்ந்தால் கூட்டுப்பாலியல் பலாத்காரமும், தனியாக இருந்தால் அறைக்குள் பாலியல் பலாத்காரம் செய்யவும் தயங்கமாட்டார் என்பதை போல கூறியுள்ளார். இது குறித்த பதிவு வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Vairamuthu Trolled by Social Media Handlers in Twitter