எனக்கே வழியில்லை.. இதுல நீ வேறையா?.. பஞ்சாயத்தான அடுத்த சர்ச்சை..!
Udhayanidhi Stalin KN Nehru Party Politics Problem
திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் மற்றும் நடிகர் உதயநிதி, தனது கட்டளைக்கு கீழ் மட்டுமே நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று மறைமுக உத்தரவை பிறப்பித்ததன் எதிரொலியாக, தற்போது அனைவரும் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக தெரியவருகிறது.
தனது ரசிகர் மன்றத்தின் தலைவரும், திருவெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழிக்கு அதிகளவு உரிமையை கொடுத்துள்ள நிலையில், திருச்சி பகுதியில் கொடிகட்டி பறந்து வந்த கே.என் நேருவை ஓரம்கட்ட துவங்கியுள்ளார். இதனால் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் பலரும் ஏற்கனவே மகேஷின் அணியில் இணைய துவங்கிவிட்டனர்.
ஏற்கனவே இந்த விவகாரம் நேருவின் காதுகளுக்கு சென்று பெரும் சோகத்தில் இருந்த நிலையில், நடிகர் விமலின் வீட்டிற்கு சென்று அவரை கட்சிக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். ஜாதி ரீதியாகவும் அப்பகுதில் செல்வாக்குடன் வளம் வந்த விமலை திமுகவில் இணைக்கும் முயற்சி தோல்வியை தழுவியது.
இந்த சம்பவங்கள் நடந்து பல மாதங்கள் கடந்து இருந்தாலும், தற்போது பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. " நானே அரசியலுக்கு வந்தது பலருக்கும் பிடிக்கவில்லை. திமுகவில் உள்ள பல தொண்டர்களுக்கே பதவி கொடுக்க வழியில்லாமல் இருக்கிறோம். இதில் நீ வேற வருகிறாயா? உனக்கு எப்படி வைப்பு கொடுப்பது " என விமலை உதயநிதி வருத்தடுத்துள்ளார்.
இதனைப்போன்று கே.என் நேருவிடம், " மனதில் என்னதான் நீங்கள் நினைத்துக்கொண்டு உள்ளேர்கள்?. செல்வாக்கு இல்லாத நடிகரை அழைத்து வந்து மகேஷுக்கும், எனக்கும் எதிரான அரசியல் செய்ய முயற்சி செய்கிறீர்களா? " என்று கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Udhayanidhi Stalin KN Nehru Party Politics Problem