சசிகலா வெளியவே வர முடியாது..! உள்குத்து குத்தும் தமிழக அரசு..! பின்னணியில் இருக்கும் விஐபிக்கள்..?!
two vip reason for sasikala problem
சசிகலா, பணமதிப்பு இழப்பு காலத்தில் வாங்கிய அவரின் சொத்துக்களின் பட்டியல் மற்றும் செல்லாத நோட்டுக்களை வட்டிக்கு விட்டது, ஜூன் மாதம் ரைடு நடந்த நாமக்கல் கம்பெனிக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு என்று அடுக்கடுக்காக சசிகலாவை பற்றியே செய்திகளையே காட்டியது. இப்போது ஜெயலலிதாவின் போயஸ்கார்டன், கொடநாடு எஸ்டேட் உட்பட எல்லாச் சொத்துக்களும் எனக்குத்தான் சொந்தம் என்கிற அவரது வாக்குமூலம் வெளியாகி இருக்கிறது.
மேலும், இதனால் தெரியவரும் செய்தி என்னவென்றால், சசிகலா இப்போதைக்கு சிறையில் இருந்து வெளியே வரமாட்டார். இந்தச் செய்தி ஓபிஎஸ் மட்டும் இபிஎஸ்க்கு தான் லாபம். ஆனால் இதை எவ்வாறு நடத்தினார்கள்?, இருவரும் இதுவரை தன் வசமிருக்கும் வாய்ப்புகளை தனது லாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், பி.ஜே.பி இப்போது பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் இலாபத்துக்காகப் பயன்படுத்துவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
தற்போது அதிமுகவில் இதை பற்றி தான் அதிகம் பேசப்பட்டு வருகிறதாம். எதை வைத்து, அல்லது எதைக்காட்டி இந்த தமிழக இரட்டையர்கள், அந்த குஜராத் இரட்டையர்களிடம் காரியம் சந்தித்து இருப்பார்கள், இதற்கு அ.தி.மு.க என்ன விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதே அவர்களது கவலையாக இருக்கிறதாம்.
English Summary
two vip reason for sasikala problem