திருவண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் விவகாரம்.. ட்விட்டரில் வருத்தடுத்த நெட்டிசன்கள்.!!
Tiruvannamalai Caste Atrocity Discrimination issue Thirumavalavan twit
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அரியாகுஞ்சூர் ஊராட்சியானது பட்டியல் பழங்குடியினருக்கு ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டது. இதன்படி, அரியாகுஞ்சூர் பகுதியை சார்ந்த முருகேசன் என்பவர் தேர்தலில் போட்டியிட்டார். இவர் இருளர் இனத்தை சார்ந்தவர் ஆவார்.
தேர்தலில் வெற்றி பெற்ற முருகேசன், ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவரான முருகேசனை, சவக்குழி தோண்ட வைத்த சம்பவமானது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பான தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தொல்.திருமாவளவன் ட்விட் பதிவு செய்துள்ளார்.. இது குறித்து ட்விட்டர் பதிவில், " இங்கே கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆனாலும், சாதி-மதவெறி கும்பலின் கொட்டம் ஓய்ந்தபாடில்லை " என்று கூறியுள்ளார்.
இந்த ட்விட்டை கண்ட நெட்டிசன்கள், இதில் விமர்சனம் செய்ய ஒன்றும் இல்லை.. நீங்கள் கூறிய சாதி வெறி உங்களுக்குள் இருக்கும் உள் இன அமைப்பின் அடிப்படையில் மேற்கூறிய பிரச்சனை நடந்துள்ளது என்று கூறியுள்ளனர். பொதுவாக சாதி வெறி என்றாலே, பிற ஜாதிகளை குறைகூறும் நபர்களும், உண்மை தெரியாமல் குறைந்த தொகைக்கு செயல்பட்டு வரும் நபர்களுக்கும் இது பேரிடியாக அமைந்துள்ளது என்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai Caste Atrocity Discrimination issue Thirumavalavan twit