உன்னை காணாது நானிங்கு..... என் அன்பார்ந்த காதலரை எங்காவது பார்த்தீர்களா?... டிக் டாக்கில் அடுத்த சம்பவம்..!!
tic tok love problem about divya and karthick
டிக் டாக் பல குடும்பங்களை சீரழித்தது, பல மனிதர்களின் வாழ்க்கையை சீரழித்தது இன்னும் எத்தனை சீரழிக்க போகிறது என்பது அறியாமல் பெரும் பிரச்சனையை நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. டிக்டாக் தான் உலகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நபர்கள், உண்மையை உணரும் போது மனநலம் பாதிக்கப்பட்டது போல மாறியிருப்பது தான் கவலை மற்றும் எதார்த்தத்தின் உச்சகட்டமாக இருக்கிறது.
டிக்டாக் ஜிபி முத்து, ரவுடி பேபி, கடல் கன்னி, காதல் ரோமியோக்கள், பேப்பர் ஐடி போன்ற பல காமெடி நாயகர்கள், தங்களின் அன்றாட பணிகளை விட்டுவிட்டு டிக் டாக்கில் வீடியோ போடுவதை பிழைப்பாக வைத்து, இவர்களையும் பெரிய புள்ளிகள் என்று நினைத்து பேட்டியெடுத்த பிற நிறுவனங்கள் பரிதாபத்தின் கேள்விக்குறி என்று தான் கூற வேண்டும்.
டிக் டாக்கில் நடிகர் அஜித்தின் ரசிகை என்று கூறி வந்தவர் தல திவ்யா. இவர் சாதிப்பற்று மிக்கவராகவும், முகநூல் மற்றும் வாட்ஸ்அப், டிக் டாக், ஹெலோ ஆப் போன்ற கணக்கில் மட்டுமல்லாது, பல ரோட்டோர கடைகளில் கணக்குகள் வைத்துள்ளார்.
திவ்யா பட்டதாரியாக இருந்து வரும் நிலையில், இவரிடம் மனதை பறி கொடுத்தவர் மற்றும் இவர் பரிமாறிக் கொண்டவர் பாண்டியநாடு தளபதி ரசிகர் கார்த்தி. இவர்கள் இருவரும் துவக்கத்தில் தங்கள் கதாநாயகர்களை பெரிதாக நினைத்து முட்டி மோதி சண்டையிட்டுக்கொண்ட நிலையில், தல தளபதி சண்டையில் ஆரம்பித்த பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது.
இதுவே இவர்களின் வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. இதனையடுத்து தன்னை பெரிய நடிகையாக நினைத்துக்கொண்ட திவ்யா பல வீடியோக்களை பதிவேற்ற வந்த நிலையில், திடீரென கிளாமராக வீடியோ பதிவுகளை பதிவேற்றி, தனது சொந்தக்காரர்களை பதற வைத்துள்ளார். இது பிடிக்காத பாண்டிய நாட்டு தங்கம், பல முறை கண்டிக்கவும் செய்துள்ளார்.
இதனையடுத்து, திவ்யா எவ்வுளவு கூறியும் கேட்காததால், மூன்று வருடமாக காதலித்து வந்த காதலையும் மறந்து டிக்டாக் வீடியோவால் கார்த்திக் பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், சாதி மறுப்பு திருமணம் செய்ய மனமில்லாத கார்த்தி தலைமறைவாகவே, தனது காதலரை தேடி டிஸ்கவரி சேனல் புகழ் பியர் கிர்ல்ஸ் போல காடு மலையெல்லாம் சுற்றித் திரிந்து கண்ட இடங்களிலும் சென்று மனு கொடுத்துவிட்டு வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறார்.
விடியோவை காண இங்கு அழுத்தவும்..
மேலும், தனது காதலன் கிடைக்க வேண்டுமென்று மாதாவிடம் ஜெபம் செய்ய போவதாகவும், சூனியம் வைக்க போவதாகவும் பல வீடியோ பதிவு செய்து வந்த நிலையில், கடல் நடுவே இறங்கி நின்று தற்கொலை மிரட்டல் வீடியோ செய்தும் வந்துள்ளார். இந்த விடீயோவிற்கு எந்த விதமான பலனும் இல்லாததால், என்னதான் செய்வது என்று தெரியாமல் தனது கணக்குகள் வைத்த இடமெல்லாம் கண்ணீர் சிந்தி திவ்யா செல்கிறார்.. டிக் டாக் திறமையை வெளிக்கொண்டுவர மற்றும் பொழுதை சிரித்துக்கொண்டு கழிக்க மட்டுமே உபயோகம் செய்தால், பைத்தியம் போல தலையில் அடித்து செல்லும் நிலைமை வராமல் போகும்...
Tamil online news Today News in Tamil
English Summary
tic tok love problem about divya and karthick