நடிகர் சூர்யாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
suresh raina questioned actor Surya
நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வெளியாக இருக்கும் படம் என் ஜி கே. இந்த படத்தில் கதாநாயகிகளாக சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த படம் வருகின்ற மே 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில் சமூக வலைத்தளத்தில் #ASKsurya என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களிடையே சூர்யாவிடம் கேள்வி கேட்க அறிவிக்கப்பட்டது. அதில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா வீடியோ வடிவில் பதிலளித்தார். அதில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமான ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். ஆம் அவர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் நடிகர் சூர்யாவிடம் சென்னை அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
இதனைக் கேட்ட நடிகர் சூர்யா ஆச்சரியத்தில் என்ன சொல்கிறீர்கள்? மாப்பிளையா? நான் எப்போதும் அவரை அப்படித்தான் கூப்பிடுவேன் என கூறினார். மேலும் இதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறதா?என்னால் இதனை நம்பவே முடியவில்லை. உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் கேட்டதாக தெரிவித்துக் கொள்ளுங்கள் எனக் கூறிய நடிகர் சூர்யா அவர் கேட்ட கேள்விக்கு பதிலையும் தெரிவித்துள்ளார்.
என்னால் ஒரு தலைபட்சமாக சொல்ல முடியாது இருந்தாலும் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். தோணி தான் எனக்கு பிடித்த வீரர் நான் முதன் முதலில் அவரை தான் சந்தித்தேன். அவரை சந்திக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. அதன் பிறகுதான் நான் உங்களை சந்தித்தேன். நீங்களே வந்து முதலில் என்னிடம் பேசினீர்கள். அந்த அளவுக்கு உங்கள் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி. நான் உங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். நினைவுகூறுகிறேன். கடந்த ஐபிஎல் போட்டிகளை நான் ரசித்தேன் எப்போதுமே நான் சிஎஸ்கே ரசிகன் தான் என்று பதிலளித்துள்ளார். இதனை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
English Summary
suresh raina questioned actor Surya