சீமானின் கொந்தளிப்பு பேட்டிக்கு பின்னால் நடந்த பலே சம்பவம்... பரபரப்பு தகவல்.!!
seeman press meet behind screen
நடிகை விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகிவிட்டு ஏமாற்றியதாக விஜயலட்சுமி சமீபத்தில் புகார் அளித்தார். இதை ஏற்காத சீமான், நடிகை விஜயலட்சுமி சினிமா வாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் தவிர்த்து வருவதாக என்னிடம் கூறினார். எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து சீமான், விஜயலட்சுமி உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை விஜயலட்சுமி வெளியிட்டார். மேலும் நாங்கள் இருவரும் காதலர் தினத்தை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம் என தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியிட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வந்தது. அந்த வீடியோவில், பொண்டாட்டி மாமாவ நல்லவனு நினைக்காத, ரொம்ப நல்லவன் மா என சீமான் கூறி இருப்பார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு, சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், காதலில் ஒன்றுமில்லை.. ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை... காதலுக்காக யாரும் சாகக் கூடாது.
ஆனால் காதலிக்காமல் யாரும் சாகக் கூடாது! ஆதலால் காதல் செய்வீர்..! என பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீமான் காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தது நெட்டிசன்களால் வசைபாடப்பட்டது. மேலும், நடிகை விஜயலட்சுமியும் தற்போது வரை பல விடீயோக்களை வெளியிட்டு, பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து கொண்டு வருகிறார்.
இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இது எதையுமே கண்டுகொள்ளாது போல இருக்கும் சீமான் கட்சிப்பணிகளை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் மதுரையில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சீமான் - விஜயலட்சுமி பிரச்சனையை பேசியிருந்த செய்தி நிறுவனமும் சீமான் - விஜயலட்சுமி தொடர்பான விஷயத்தை வைத்து கேள்விகளை எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.
இதனை முன்கூட்டியே நன்கு புரிந்துகொண்ட தம்பிகள் செய்தியாளர்களை அழைத்து சீமான் - விஜயலட்சுமி தொடர்பான கேள்வியை யாரும் கேட்க கூடாது என்று கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த பத்திரிகையாளர்கள், கேள்வியை நாங்கள் தான் கேட்போம் என்று கூறவே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. பின்னர் தம்பிகள் அவர்களின் பெரிய தம்பிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு, சீமான் சிஏஏ தொடர்பான பதிலை மட்டுமே தெரிவிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், பத்திரிகையாளர்கள் தயவு செய்து ஒத்துழையுங்கள் என்று தெரிவிக்கவே, சீமானும் செய்தியாளர்களை கட்டாயம் சந்திக்காமல் செல்லமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்துள்ளார். இதனையடுத்து தம்பிகள் பத்திரிகையாளர்களிடம் கெஞ்சி கூத்தாடி சீமான் - விஜயலட்சுமி தொடர்பான கேள்வியை எழுப்பவில்லை என்று உறுதியளித்துள்ளார். இவ்வுளவு நேரம் கெஞ்சி இருந்தாலும், இறுதி நேரத்தில் காலைவாரிவிட கூடாது என்று கருதி சத்தியமெல்லாம் வாங்கிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்களும் என்ன இருந்தாலும் நம்ம ஊரு பிள்ளைகள் என்று தம்பிகளுக்கு மனமிறங்கி செயல்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
seeman press meet behind screen