மருமகள் செய்த காரியம்... மாமனார் எடுத்த அதிர்ச்சி முடிவு...! இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா.. வீடியோ உள்ளே..!!
mama short flim says about to speech and solve problem
தற்போதுள்ள காலகட்டத்தில் பலவிதமான குற்றங்கள் நடைபெறுகிறது. நாம் குற்றங்களை மட்டுமே அறிந்து வரும் நிலையில் அதற்கான காரணத்தையும் அறிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பிரச்சனைக்கு தீர்வுகாண நாம் அனைத்து தரப்பிலும் யோசனை செய்து., பிரச்சனைக்கான மூலக்காரணத்தை கண்டறிந்து அதனை எளிதில் தீர்க்க வழி கிடைக்கலாம்.
ஒவ்வொரு குற்றத்திலும் குற்றவாளிக்கு குற்றத்திற்க்கான காரணம் இருந்து கொண்டு தான் இருக்கும் என்றாலும்., பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அத்துமீறல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்றால்., அதனையும் தயங்காமல் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தற்போது நாம் காணஇருக்கும் பிரச்சனை என்பது தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் உள்ள பிரச்சனையாக கருதப்படும் கள்ளக்காதல். கள்ளக்காதல் என்பது எங்கு துவங்குகிறது? எதனால் துவங்குகிறது? என்பது தீர்மானிக்க இயலாது என்றாலும்., சிலவகையான காரணங்கள் உள்ளது. இதனைக்காண்பதற்கு முன்னதாக கள்ளக்காதல் பிரச்சனையால் அரங்கேறிய படுகொலைகள் மற்றும் சிறு பிஞ்சுகளின் கொடூர கொலைகள் மட்டும் நமது நினைவிற்கு வந்து செல்லும் என்பது மறைக்க இயலாதது.
கள்ளக்காதல் என்று கூறினாலே பெண்ணின் மீது அப்பட்டமாக குற்றமும் குறையும் இந்த உலகம் கூறுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இந்த விஷயத்தை பொறுத்தவரையில் யாரின் மீதும் குறைகூற இயலாது. ஏனெனில் நமது வாழ்வியல் சூழ்நிலை பல படிநிலைகளை கொண்டுள்ளது. பொதுவாக திருமணம் முடித்த தம்பதிகள் பேசி புரிந்துகொள்ளும் முன்னரே தங்களின் வாழ்க்கையை கழுத்தில் தாலி ஏறிய நொடியில் இருந்து துவக்கிவிடுகின்றனர். இருபாலரும் தங்களின் வாழ்க்கையின் முற்பாதியில் நடந்த இன்ப துன்பங்களை மறந்து வாழ்க்கையை துவக்க வேண்டும்..
இல்லையேல் தங்காள் இருவரும் தங்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு பின்னாளில் புரிந்து கொண்டு வாழ்க்கையை துவக்க வேண்டும்.. இவ்வாறாக இருவருக்கும் உள்ள புரிதலே வாழ்க்கையின் முதற்படியாக இருக்கும். தம்பதிகள் தங்களின் நினைவுகளை பகிரும் போது அது காதலாக இருக்கும் பட்சத்தில்., இப்போது நீ எனக்கு துணை.. நான் உன்னையும் உந்தன் நடவடிக்கை மீதும் எவ்விதமான சந்தேகமும் படமாட்டேன் என்ற உறுதியை எடுத்து கொள்ள வேண்டும் (அந்தந்த நபரின் மனநிலையை பொறுத்து இது மாறுபடும்). சில தம்பதிகளின் தங்களின் துணையின் மனநிலை காரணமாக சில விஷயத்தை மறைத்துவிடுவது இயல்பு.
தம்பதிகளின் மனநிலை முகத்தில் இருந்து வெளிப்படும் என்பதால்., வீட்டில் இருக்கும் தாய் - தந்தையால் / மாமனார் - மாமியாரால் எளிதில் நோட்டமிடப்படும். ஏனெனில் அவர்கள் வாழ்க்கையின் பெரும்பாதியை வாழ்ந்திருப்பதால் பல அனுபவங்கள் கிடைத்திருக்கும். இதன் அடிப்படையில் நமது செயல்பாடுகளில் உள்ள வித்தியாசத்தை காண இயலும். நல்ல தந்தையாக / மாமனாராக தனது மகளுக்கோ / மகனுக்கோ செய்யும் கடமையாகவும் சில விஷயங்கள் இருக்கிறது. இது குடும்பத்திற்குள்ளேயே முடியவேண்டிய பிரச்சனை என்றாலும்., தற்போதுள்ள காலகட்டத்திற்கு நாமும் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது இளைஞர்களின் முயற்சியால் எடுக்கப்பட்டுள்ள "மாமா" என்ற குறும்படமானது மேற்கூறியுள்ள கூற்றுகளின் ஒரு அங்கம் என்பதும்., இதனை போல பல காரணங்கள் இருந்தாலும் இதனை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. ஏனெனில் தம்பதிகளின் வாழ்க்கையில் சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும் அதனை பேசி புரிந்துகொண்ட சரி செய்ய வேண்டும். இதன் மூலமாக நமக்கு தெரியவேண்டியது பேசினால் தீராத பிரச்சனை இல்லை., முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும்., நாம் எடுக்கும் முடிவு நமக்கானது மட்டுமல்ல., நமது முடிவால் பாதிக்கப்படப்போவது / சந்தோசப்படப்போவது நம்முடன் இருந்த நமது உறவுகள் மட்டுமே., எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டும்., அனைவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்., நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்பிக்கை இருக்க வேண்டும் போன்றதாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
mama short flim says about to speech and solve problem