குடிமகன்களுக்கு நெஞ்சு வெடிக்கும் அதிர்ச்சி செய்தி... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!
in tamilnadu liquor alcohol price increased
தமிழகத்தின் உள்ள அரசு மதுபான கடைகள் விடுமுறை நாட்களில் பெரும் சாதனை படைப்பது வழக்கமான ஒன்றாகியுள்ளது. ஒவ்வொரு அரசு விடுமுறைக்கு, மதுபான கடை விடுமுறை இல்லாத நாட்களிலும் மதுபான விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யும் பெரும் சாதனையை படைத்து வருகிறோம்.
இதனால் நாம் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகவேண்டிய வேளையில், கடந்த வருடத்தின் பொங்கல் பண்டிகைக்கும் மதுபான கடைகளில் நல்ல வருமானம் கிடைத்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையான மூன்று நாட்களில், மாட்டு பொங்கல் நாளன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.
விடுமுறையை அறிந்து கொள்ளும் நமது தங்க குடி மகன்கள் திட்டம் போட்டு மதுபானங்களை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளதால் போன வருடத்தை விட சூடு பிடித்த விற்பனை நடந்துள்ளது.
போகி பண்டிகை தினமான கடந்த 14 ஆம் தேதியன்று ரூ.178 கோடி விற்பனையும், பொங்கல் பண்டிகையான 15 ஆம் தேதியன்று ரூ.253 கோடி விற்பனையும் நடந்துள்ளது. 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் விடுமுறைக்கு பின்னர், 17 ஆம் தேதி ரூ.174 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பொங்கல் சிறப்பு பரிசாக பலரின் உள்ளம் மது போதையில் குதூகலமாக இருந்தாலும், உடல் உறுப்புக்கள் விரைவில் செயலிழக்க மூன்றே நாட்களில் மதுபான விற்பனை ரூ.605 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போது இருக்கும் விலையே அதிகம் என்று நினைக்கும் நல்ல உள்ளங்கள் பல புதுச்சேரிக்கு சென்று மது அருந்தி வந்த நிலையில், புதுச்சேரியில் மதுபான விலை உயர்ந்த நேரத்தில் புதுச்சேரியை சார்ந்த குடிமகன்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
புதுச்சேரியை பொறுத்த வரையில் அங்குள்ள குடிமகன்களுக்கு இது மாரடைப்பை ஏற்படுத்தினாலும், தமிழக குடிமகன்களுக்கு இங்குள்ள விலையை யோசிக்கும் போது அமைதியாக இருந்த நிலையில், தமிழகத்தில் மதுபான விலை உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி குவாட்டர் விலை ரூ.10 உயர்த்தப்பட்டும், பீரின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டும், புள் பாட்டிலின் விலை ரூ.40 உயர்த்தப்பட்டும், ஆஃபின் விலை ரூ.20 உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருவதாக தெரியவருகிறது. இது குடிமகன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் அலுப்பிற்காக குடிக்கும் குடிமகன்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
மேலும், ஓசி குடிக்கு ரூ.10 தந்தால் பக்கத்து ஊருக்கு சென்றுவிடுவேன், ரூ.10 இருந்தால் கட்டிங் வாங்கிவிடுவேன் என்று 2 குவாட்டர் வாங்கி அடிக்கும் குடிமகன்கள், கட்டிங்க்கு கங்கணம் கட்டி அலையும் குடிமகன்கள், மொடா குடிமகன்கள் போன்றோர் என்ன நடந்தாலும் தனது உடல் நலனை நாடாது இருப்பதும் பெரும் சோகமே.. எப்படியோ வருமானம் சீரும் சிறப்புமாக வயிறை எரியவைத்து வாழ்ந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in tamilnadu liquor alcohol price increased