நாடகக்காதல் கும்பலால் பாதிக்கப்படும் பெண்கள்.. எதிர்த்து களத்தில் இறங்கிய பிரபல இயக்குனர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து வரும் கொடூரங்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அவ்வாறாக வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். இப்போது உள்ள காலகட்டங்களில் குற்றங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் நாம்., குற்றத்திற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில்., இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய கட்டாய மறந்து விடுகிறோம். 

பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் ஒருதலைக்காதல் மற்றும் மது பழக்கம் போன்றவை கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் பல பிரச்சனைகளாக இருந்து வருகிறது. ஒருபுறம் பாலியல் வன்கொடுமை., வரதட்சணை கொடுமை என்று இருந்தால் பெரும் பிரச்சனையாக இருப்பது நாடக காதல். 

drama love,

பெண்களுக்கு காதலில் விருப்பம் இல்லை என்று தெரிந்தாலும் விரட்டி விரட்டி காதல் செய்வது போன்ற பழக்கங்களுக்கு தமிழ் திரையுலகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசியல் அமைப்புகள் மற்றும் சாதியற்ற சமுதாயம் என்ற பெயரில் இளைஞர்களை தவறான வழிக்கு எடுத்துச் செல்வது இதுபோன்ற சீர்கேட்டை ஊக்கப்படுத்தி வருகிறது. 

தமிழ் திரையுலகில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் நாடக காதலை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது. மேலும்., 3 மணிநேர திரைபடத்தை எடுத்துவிட்டு முழு வாழ்க்கையை பெரும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது. இத்திரைப்படங்களில் கூறப்படும் கருத்துக்களும்., இதனை காணும் இளைஞர்களும் நாளடைவில் தங்களின் வாழ்க்கையை சீரழித்துக்கொள்வது மட்டுமல்லாது பெண்ணின் வாழ்க்கையை பெரும் கேள்விக்குறியாக்கிவிடுகின்றனர். 

பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படும் நிலையில் இருந்து தற்போது மாறி கொலை மற்றும் கற்பழிப்பு., கூட்டுப்பாலியல் வன்கொடுமை போன்ற குற்றத்திற்கும் வழிவகை செய்கிறது. பொது இடத்தில் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இந்த போலி ஜாதி ஒழிப்பு போராளிகள் மூலமாக சமுதாயமே சீரழிந்து வருகிறது.


திரைத்துறையில் இரண்டு மூன்று படங்களை இயக்கிவிட்டு பெரும் நடிகரை வைத்து இயக்கிய இயக்குனர் ரஞ்சித்., தற்போது இயக்குனராகவும்., பட தயாரிப்பாளராகவும் விளங்கி வரும் நிலையில்., அவரின் கதையம்சம் அனைத்துமே வடமாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பெண்களை குறிவைத்து நாடக காதலால் கவிழ்ப்பது போல இயக்கப்பட்டு வந்தது. 

இதனை கண்ட பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன்.ஜி அந்த இயக்குனரிடம் கேள்வி எழுப்பினார்.. இது குறித்த உரையாடல் பதிவுகள் வைரலாகி வருகிறது. மேலும்., நாடக காதல்., போலி சாதி ஒழிப்பு போராளிகள் மற்றும் ரோடு சைடு ரோமியோக்களால் பல இன்னல்களை சந்தித்து வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என பெரும்பாலான இணையதள நெட்டிசன்கள் இயக்குனர் மோகன்.ஜி அவர்களின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்து வந்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in social media trending about drama love problem mogan g director twit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->