இரத்தம் கொதிக்க, சூடேற்றும் பேச்சுடன் பரபரப்பு டிக் டாக் வீடியோ.. நாம் தமிழர் பிரமுகரை தேடி வலைவீசும் காவல்துறை.!!
in rajiv gandhi memorial place naam tamilar tic tok video
டிக் டாக் செயலியில் பல சர்ச்சை விஷயங்கள் நடைபெற்று வருகிறது. உலகத்தில் என்ன நிகழ்கிறது என்பது தெரியாமல், டிக் டாக் லைக்குகளை பாசமாகவும், நெசமாகவும் எண்ணி உயிர்வாழும் ஜீவன்கள் சில நேரங்களில் சர்ச்சை விஷயத்தில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றாகும்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சார்ந்தவர் சட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியில் இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ராஜீவகாந்தி நினைவகத்தில் டிக் டாக் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான விடியோவை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவில் சர்ச்சைக்குரிய வசனங்கள் மற்றும் சைகைகளில் பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவு காங்கிரஸ் நிர்வாகியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சாட்டை முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in rajiv gandhi memorial place naam tamilar tic tok video