பறக்கும் விமானத்தில் 6 மணி நேரம் காதல் ஜோடி செய்த காரியம்.! சக பயணிகள் ஷாக்.! வெளியான புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்கள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. முகம் சுளிக்கும்படியான சில தகவல்கள் இருந்தாலும், பல பயனுள்ள விஷயங்களை இதில் நாம் காண முடிகிறது. தற்போது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

அந்த புகைப்படத்தில் பறக்கும் விமானம் ஒன்றில் ஒருவர் நின்றபடி தன்னுடைய மனைவி தூங்குவதற்கு ஏதுவாக தன்னுடைய சீட்டை ஆறு மணி நேரமாக விட்டுக்கொடுத்து நின்றபடி பயணம் செய்துள்ளார். என்னதான் வயதாகிநாளும் இந்த காதல் ஜோடியின் எல்லையற்ற அன்பை கண்ட இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.

மேலும், ஆறு மணி நேரம் கணவர் நின்று கொண்டு அமைதியாக உறங்கிய மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதுதான் காதல் என கூறி அவர் பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் அவர்களின் காதலை பாராட்டி மெய்சிலிர்த்து வருகின்றனர்.

ஒரு சிலர் இது குறித்து நையாண்டி தனமான கமெண்டுகளை கொடுத்தாலும், அந்தப் மனைவியை சுயநலவாதி என சிலர் திட்டி வருகின்றனர். எது எப்படியோ இந்த உலகில் இது போன்ற தியாக மனப்பான்மை வாய்ந்த கணவன்கள் இருக்கும்வரை காதலுக்கு ஓய்வில்லை.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband does for his wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->