அதிகாரியை பார்த்ததும் அலெர்ட் ஆன குரங்கு.. வைரலாகும் கலக்கல் வீடியோ.!!
Forest dept officer Susanta Nanda latest twit video
சமூக ஊடகங்களில் எப்போதும் ட்ரெண்டிங் ஆன விசயத்திற்கு பஞ்சமே கிடையாது. ஏனெனில் நாம் அறியாத பல விஷயமும், வியப்பூட்டும் வகையில் காணும் பல விஷயமும் இணையதளங்களின் வாயிலாக அதிகளவு வைரலாகி வருகிறது. இணையதளத்தின் மூலமாக நாம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறே கண்டு மகிழ்ந்து வருகிறோம்.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவுடன் இயங்கும் நபர் ஆவார். இவர் அவ்வப்போது பல விலங்குகளின் செயல்பாடுகளை பதிவு செய்தும், பகிர்ந்தும் வருவார். இவர் பதிவு செய்துள்ள விடீயோக்களில் பல ஆச்சர்யமூட்டும் வகையில் இருக்கும். அந்த வகையில், தற்போது பதிவு செய்துள்ள வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
இது குறித்த வீடியோ காட்சியில், குரங்கு ஒன்று விளையாட்டு தனமாக அங்கிருந்த சணல் சாக்கை எடுத்து தனது முகத்தினை மறைத்து அங்கும், இங்குமாக வளம் வந்து பின்னர் சாக்கை எடுத்து வீசுகிறது. இந்த விடியோவை வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில், மனிதர்கள் முகக்கவசத்தை மூக்கு மற்றும் வாய் பகுதி மறைக்கும்படி அணிகிறார்கள், குரங்கு தனது முகத்தையே மறைத்து கொள்கிறது என்று கூறி பதிவு செய்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Forest dept officer Susanta Nanda latest twit video