மீண்டும் ட்விட் போட்ட  டாக்டர் ராமதாஸ்! இரண்டே ட்விட்டில் திமுகவை தெறிக்கவிடும் பாமக! பதுங்குமா? பாயுமா?  திமுக!  - Seithipunal
Seithipunal


முரசொலி நிலம் தொடர்பாக பொய்ப் புகார் அளித்தோர் மீது திமுக தொடரும் அவதூறு வழக்கில், முதன்முதலில் பொய்யுரைத்த மருத்துவர் ராமதாசுக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலம் குறித்த உண்மைகள் வெளியாகும்" என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேட்டியளித்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தற்போது இரண்டு ட்விட்களை பதிவு செய்துள்ளார். அதில், "முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.அது தான் அறம்.அது தான் நேர்மை! 

முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!" என பதிவு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss tweet about rs bharathi speech 1000 acres land


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->