சிதறவுட்டாங்கோ.. பதறவுட்டாங்க... அரியலூர் பெண்ணின் அல்லு சேட்டை டிக் டாக் வீடியோ..!!
corona positive tic tok girl video
டிக் டாக் செயலியின் மோகம் யாரைத்தான் விட்டுவைத்தது என்பதை போல, சிறுவயதினர் முதல் வயதான நபர்கள் வரை டிக் டாக் செயலி அறிமுகம் கிடைத்துவிட்டால் அதிலேயே மூழ்கி இருக்கின்றனர். கரோனா பாதித்தும் கவலைப்படாது டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வரும் அரியலூர் பெண்ணை ஒருபுறம் பாராட்டவும், மற்றொரு புறம் அவரது உடல்நலம் முன்னேறட்டும் என்று வேண்டிக்கொள்வதுமாக உள்ளது.
அரியலூரை சொந்த ஊராக கொண்ட பெண்மணி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வயது 25 ஆகும் நிலையில், இவர் சென்னையில் இருந்து காய்ச்சல் அறிகுறியுடன் ஊருக்கு திரும்பியுள்ளார். ஊருக்கு வந்து அரியலூர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், இவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கரோனா வார்டில் அனுமதியானாலும் டிக் டாக் செயலிக்கு அடிமையானதால், இவர் மருத்துவமனையிலேயே டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும், இவரது டிக் டாக் மோகத்தை தனக்கு சிகிச்சை அளித்த அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார்.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்க, சுகாதாரத்துறையினர் மூன்று பெண்களையும் பணிநீக்கம் செய்து தனிமைப்படுத்தி பக்கத்து அறையில் அனுமதித்துள்ளனர். இவரது டிக் டாக் மோகம் குறித்து பல்வேறு கருத்துகளும் உலா வரும் நிலையில், மனநல மருத்துவர்கள் இவர் தனிமை பொழுதுகளை மனமகிழ்ச்சியுடன் கழித்து வருவது, அவரது உடல் நலத்தை மேம்படுத்த இயலும் என்று தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
corona positive tic tok girl video