திமுகவிடம் கெத்து காண்பிக்க காங்கிரஸ் போட்ட பலே திட்டம்?.. சட்டமன்றத்தில் சீட் கன்பாம்?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெறும் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தாத நிலையில், இது தொடர்பான தகவலை அரசியல் கட்சி வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் முதல் வாரத்தில் சென்னைக்கு ராகுல் காந்தி வருவதாகவும், காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் இருக்கும் 150 அடி உயர கொடிக்கம்பளத்தில் கொடியேற்றிவைக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், ராஜிவ் காந்தி இருந்த நேரத்தில் சென்னையில் உள்ள மறைமலைநகரில் நடத்தப்பட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கு பின்னர் எந்த விதமான பெரிய அளவிலான மாநாடு நடத்தப்படாது இருக்கும் நிலையில், இதனை மேற்கோள் காட்டி டெல்லியில் இருந்து சில அதிரடி உத்தரவுகளும் வந்துள்ளதாம்.  

இதன் பின்னரே மாநாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பிரம்மாண்டத்தின் மூலமாக திமுகவிடம் இருந்து அதிக சீட்டுகளை சட்டமன்ற தேர்தலில் பெற அடித்தளமாகவும் இந்த மாநாடு அமையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress plan to get more numbers of mla seat in assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->