ஹாயாக காங்கிரஸ் எம்பி செய்த செயல்.! கட்டம் கட்டிய நெட்டிசன்கள்.!
congress mp tweet about idly day
நாடே கொரோனா வைரஸ் பீதியில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் நேற்று தன்னுடைய வலைப்பக்கத்தில் உலக இட்லி தினத்தை கொண்டாடும் வகையில் மூன்று இட்லி மற்றும் பலவிதமான சட்னிகள் கொண்ட படத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும், நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக தான் கொண்டாடி வருகிறேன். எனவே, இன்று மார்ச் 30 அதிகாரப்பூர்வமான இட்லி தினம் ஆகும். மனிதன் அல்லது கடவுளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சுவையான காலை உணவு இட்லி என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் எட்டிசன்கள் இதனை மிகவும் கிண்டல் மற்றும் விமர்சனம் செய்யகூடிய ஒரு விஷயமாக மாற்றியுள்ளனர். கேரள மாநிலத்தில் குடிபெயர்ந்தவர்கள் அத்தியாவசிய உணவிற்காக மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
ஆனால், இவரோ தனது அந்தஸ்தையும் ஆடம்பர வாழ்க்கையையும் அனுபவித்து வாழ்கிறார். இது எவ்வளவு மோசமான ஒரு செயல். என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதேபோல இன்னொருவரோ 3 இட்லி 10 விதமாக சட்னி உலக சட்னி தினம் என்று கூறுங்கள் என்று கேலி செய்துள்ளார்.
English Summary
congress mp tweet about idly day