பைக்கில் குளித்து கொண்டே சென்ற இளைஞர்கள்... வினையை விலை கொடுத்து வாங்கிய சோகம்..!
bathing on driving bike police punished
ஒரே நைட்டில் உலகம் முழுவதும் பிரபலம் ஆகுவதாக எண்ணி, சிலர் கிறுக்கு தனமான வேலைகளை செய்து வம்பில் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள். அதாவது வினையை விலை கொடுத்து வாங்கி கொள்வார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் வாகனம் ஓட்டி கொண்டே வாளியில் தண்ணீரை வைத்து குளித்து கொண்டு சென்றவருக்கு நேர்ந்த சம்பவம் தான் இது.
வியட்நாம் என்னும் நாட்டை சேர்ந்த இரண்டு பேர், ஒருவரது பெயர் Huynh Thanh Khanh. 23 வயதாகும் இவரும், இவரது நண்பரும் உடம்பில் சட்டை போடாமல் ஒருவர் வாகனம் ஓட்டி கொண்டு செல்ல மற்றொருவர் அவரின் பின்னால் அமர்ந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வாளி ஒன்றில் தண்ணீர் வைத்துக்கொண்டு பின்னால் இருப்பவர் இருவரது தலையிலும் சோப்பு போட்டு பின்னர் தண்ணீர் ஊற்று கொண்டே வருகிறார்.
மேலும், அந்த வீடியோ காட்சியில் வாகனம் ஓட்டுபவர் தனது கால் இடுக்கில் பீர் பெட்டியை வைத்திருப்பது தெரிகிறது. இவர் வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடீயோவை பார்த்த அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள், வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டிய இருவருக்கும் அபராதம் விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
English Summary
bathing on driving bike police punished