''அப்பா அம்மா விளையாட்டு'' - மனம் திறக்கிறார் அனிதா சம்பத்.
anitha sampath about love
காதல் பிரேக் அப் ஆக இதுவே காரணம் அனிதா சம்பத் பார்வையில்.
சமூக வலைதளத்தில் இளைஞர்களின் ஆதரவை பெற்ற நபர்களில் ஒருவராக உள்ளவர் அனிதா சம்பத். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் இவர் வார இதழ் ஒன்றுக்கு குறும்புத்தனமான பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது:
தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் யாரும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புவதில்லை. ஆண்களுக்குச் சமமான சுதந்திரம் இப்போதைய பெண்களுக்கும் தேவைப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைப்பதில்லை. நிறைய விசயங்களை விட்டுக் கொடுத்துப் போக வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம், காதலிப்பவர்கள் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழலாம் அல்லது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழலாம். ஆனால், லிவிங் டுகெதர் போன்ற விசயங்களை செய்வது சின்ன குழந்தைகள் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடுவது போலத்தான் லிவிங் டுகெதர் விஷயமும்.
எனக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை. அதேபோல, நான் காதலிக்கும் பையன் கண்டிப்பாக மொக்கை போடுவராக, என்னை எதிர்பார்த்து சினிமாத்தனமான காதல் செய்பவராக இருக்கக்கூடாது.
இயல்பான காதல்தான் தேவை. இப்படி காதலித்தாலும், நாம் காதலிப்பவருக்கு அடிக்கடி ஏதேனும் சர்ப்ரைஸ் செய்துகொண்டே இருக்கனும். பிடிச்ச இடத்திற்கு கூட்டிப் போக வேண்டும்.
இப்படி எல்லாம் செய்யாத போது, சண்டை வந்து, பிரேக் அப் ஆகிவிடும். தற்சமயம், யாரும் எனக்கு புரோபோஸ் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் கூட பலர் என்னிடம் கண்ணியமாகத்தான் பழகுகிறார்கள்.
தற்சமயம் நான் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துகிறேன். அதில் பலரும் என்னை ஒரு சகோதரியாகத்தான் பழகுகிறார்கள்.
இவ்வாறு அனிதா சம்பத் ஜாலியாக பேட்டி அளித்துள்ளார்
English Summary
anitha sampath about love