உனக்கு 60.. எனக்கு 20.. பாட்டியை திருமணம் செய்த இளைஞர்.! காதல் மலர்ந்த கதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள்.!!
young man 60 years old lady marriage
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஜத்புரா கிராமத்தை சேர்ந்தவர் கேசர்வதி (வயது 60). இவரது கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தொலைபேசி எண்ணிற்கு ராங் கால் மூலம் ராகேஷ் பால் என்ற இளைஞன் அறிமுகமாகியுள்ளார்.
முதலில் இருவரும் நட்பாக பேசி வந்துள்ளனர். பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். பின்னர் வீடியோகால் மூலம் தங்கள் காதலை பரிமாறிக் கொண்டனர். முதலில் ராகேஷ் தன்னுடைய காதலை கேசர்வதியிடம் கூறியுள்ளார்.
வயது காரணமாக யோசித்த கேசர்வதி, பின்னர் நாகேஷ் மீது கொண்ட அன்பால் அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், ராகேஷ் கேசர்வதியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன்-மனைவியாக தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
young man 60 years old lady marriage