காணாமல் போன கணவன்.. மனைவிக்கு மறுமணம்.! 8 ஆண்டுகள் கழித்து வெளிவந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


புது தில்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் என்பவரின் மகன் ரவி என்பவருக்கும், சகுந்தலா என்ற பெண்ணுக்கும் 2011ல் திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான சில நாட்களில் ரவி காணாமல் போய் இருக்கின்றார். இதுகுறித்து ஜெய் பகவான் காவல்துறையிடம் புகார் அளித்தும் மகனை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்த நிலையில் சகுந்தலா, கமல் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், மிகுந்த வேதனையில் இருந்த ஜெய் பகவான் தன்னுடைய மகன் குறித்து தகவல் அறியும் பொருட்டு உயர் நீதிமன்றத்தை நாடினார். இதன் காரணமாக குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சகுந்தலாவிற்கு ரவியை திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் ரவியின் சகோதரி வீட்டிற்கு சென்ற பொழுதுதான் ரவி காணாமல் போயிருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ரவியின் மனைவி சகுந்தலா மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன்படி விசாரணையில் ஈடுபட்டபோது ரவியின் மனைவி திருமணத்திற்கு முன்னதாக கமல் என்பவரை காதலித்துள்ளார். அதுமட்டுமின்றி ரவி காணாமல் போனதாக கூறப்படும் நாளில் கமல், சகுந்தலா, ரவி ஆகிய மூவரும் காரில் ஒன்றாக சென்று வந்துள்ளனர்.

அப்பொழுது தான் கமல் ரவியின் கழுத்தை கயிறு கொண்டு நெரித்து கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்துள்ளது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனை செய்த பொழுது ரவியின் உடல் எலும்பு கூடுகளாக நொறுங்கி கிடந்தது.

மேலும், கமல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தலைமறைவான சகுந்தலாவை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife lover murdered husband in 2011


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->