எதார்த்தமாக அன்புமனைவியின் பேஸ்புக்கை கண்ட கணவர்.! வெளிச்சத்திற்கு வந்த மோசமான ரகசியங்களால் துடிதுடித்துப்போன அவலம்!! - Seithipunal
Seithipunal


ஜார்ஜியாவை சேர்ந்தவர் சேத். இவரது மனைவி கிறிஸ்ஸி .19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த சேத் மற்றும் கிறிஸ்ஸிக்கு இதையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

மேலும் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்த நிலையில், ஒரு நாள் கிறிஸ்ஸி  பேஸ்புக் அக்கவுண்டை லாக் அவுட் செய்யாமல் அப்படியே விட்டுச்சென்றுள்ளார்.இதனை சேத் கண்ட நிலையில் அதில் கிரிஸ்பி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதில் கிறிஸ்ஸி வேறு நபரை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். மேலும் பல ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது சேர்த்து தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் சேத் கேள்வியெழுப்பிய நிலையில் தகராறு ஏற்பட்டு கிறிஸ்ஸி தனது குழந்தைகள் மற்றும் கணவரை விட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது நான்கு குழந்தைகளையும் தனியாக வளர்ந்துவரும் சேத் இது குறித்து கூறுகையில், எனது மனைவிக்கும் நான் எப்பொழுதுமே மிகவும் உதவியாக இருந்துள்ளேன், குழந்தையை பாலூட்டுவது முதல் அவர்களின் டயாபர் மாற்றுவது வரை எல்லாமே நானே செய்வேன். மேலும் கிறிஸ்ஸி மேல்படிப்பு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டநிலையில் கூலிவேலை செய்து அவரை படிக்க வைத்தேன். அவ்வாறு இருக்கையில் அவர் எனக்கு செய்த துரோகத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மேலும் குழந்தைகளுக்காகவாவது வீட்டை விட்டு செல்லாமல் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்வோம் என்று கூறியும் கிறிஸ்ஸி கேட்கவில்லை. அவள் கண்டிப்பாக திரும்பி வருவார் அப்போது தன் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன் என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife illegal relationship found by her facebook


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->