பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக இருந்த ஆசிரியை.! செல்ஃபி வீடியோவால் நடந்த விபரீதம்!!
teacher love in classroom
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அருகில் ராயப்பன்பட்டி எனும் இடத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
அந்த பள்ளி அருகிலே ராமசாமி நாயக்கன்பட்டியில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கும் இந்து தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகும் கடந்த சில முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அதன் பிறகு இருவரும் மிகவும் நெருக்கமாக பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த ராயப்பன்பட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது. அதன்பின்னர் அந்த ஆசிரியர் ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு சென்றுள்ளார்.
பள்ளியில் குழந்தைகள் இல்லாத நேரத்தில் அந்த ஆசிரியையுடன் மிகவும் நெருக்கமாக செல்பி மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனக்கு நெருங்கிய ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பரவி உள்ளது.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து, இதுகுறித்து மாவட்ட கல்வி ஆய்வாளர் கூறுகையில், "இந்த வீடியோ உண்மையானதா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. உண்மையாக இருக்கும் பட்சத்தில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
English Summary
teacher love in classroom