டிக்டாக் காதலியை நேரில் பார்த்த காதலருக்கு விழுந்த பேரிடி.!! அடக்கடவுளே இப்படி எல்லாமா நடக்கணும்.?  - Seithipunal
Seithipunal


டிக்டாக் காதல்:

பாளையங்கோட்டையை சேர்ந்த மரிய புஷ்பராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுகிறார். டிஃடாக்கில் மதுரையை சேர்ந்த சங்கீதா என்பவருடன் இருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மரிய புஷ்பராஜ்ற்கு சங்கீதாவை மிகவும் பிடித்துவிட்டதால் நேரில் பார்க்க ஆசை கொண்டார். அதன்படி இருவரும் ஒருவரை ஒருவர் வெளியேறி பார்த்து பேசி பழக ஆரம்பித்தனர். இதன் காரணமாக சங்கீதா கர்ப்பம் ஆகியுள்ளார்.

அதிர்ச்சி:

இதன் காரணமாக உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சங்கீதா கேட்டுள்ளார். எனவே, மரியபுஷ்பம் தனது வீட்டில் பேசி தனது பெற்றோரை சம்மதிக்க வைத்து விட்டு சங்கீதா வீட்டினரிடம் பேசுவதற்காக சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் தலையில் பெரிய இடி விழுந்துள்ளது.ஏற்கனவே சங்கீதாவிற்கு திருமணம் ஆகி விட்டது என்றும், ஒரு குழந்தையும் இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. கணவனை பிரிந்து சங்கீதா வாழ்வதாக அவருக்கு தெரிந்ததும் அவரது வாழ்வே சூனியம் போல ஆகிவிட்டது. 

தற்கொலை முயற்சி:

உண்மையை கூறாமல் சங்கீதா ஏமாற்றிவிட்டார் என்ற வேதனையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய மரிய புஷ்பத்தை மீட்டு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அவர் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக பட்ட நிலையில் அவரை பார்க்க சங்கீதா மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரைப் பார்த்து விட்டு மதுரைக்கு பஸ் ஏற நெல்லை பேருந்து நிலையம் சென்ற சங்கீதா பேருந்து நிலையத்திலேயே விஷம் கொடுத்து குடித்து மயங்கி உள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு மரியபுஷ்பம் இருக்கும் மருத்துவமனையிலேயே அனுமதித்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide tik tok love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->